பூஜைக்கு பயன்படுத்திய மலர்களை என்ன செய்வது? எப்படி மீண்டும் பயன்படுத்தலாம் பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பூஜைக்கு பயன்படுத்திய மலர்களை என்ன செய்வது? எப்படி மீண்டும் பயன்படுத்தலாம் பாருங்கள்!

பூஜைக்கு பயன்படுத்திய மலர்களை என்ன செய்வது? எப்படி மீண்டும் பயன்படுத்தலாம் பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Published Oct 19, 2024 07:00 AM IST

பூஜைக்கு பயன்படுத்திய மலர்களை என்ன செய்வது? எப்படி மீண்டும் பயன்படுத்தலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பூஜைக்கு பயன்படுத்திய மலர்களை என்ன செய்வது? எப்படி மீண்டும் பயன்படுத்தலாம் பாருங்கள்!
பூஜைக்கு பயன்படுத்திய மலர்களை என்ன செய்வது? எப்படி மீண்டும் பயன்படுத்தலாம் பாருங்கள்!

உரமாக்குதல்

பூஜைக்கு பயன்படுத்திய மலர்களை உரமாக்குவது என்பது பொதுவான வழிகளுள் ஒன்று. இவற்றை உரத்தொட்டிகளில் சேகரித்து, அவற்றி ஊட்டச்சத்துக்களை எடுத்து அல்லது மட்கச்செய்து, உங்கள் தாவரங்களுக்கு உரமாக்கலாம். காய்ந்த அல்லது ஃபிரஷ் மலர்களின் இதழ்கள் மற்றும் இலைகள் என தனித்தனியாக பறித்து உரம் தயாரிக்கும் கலனில் சேகரித்து, அப்படியே சில வாரங்கள் விட்டுவிட்டால் அவை மட்கி நல்ல உரமாகிவிடும். இதை நீங்கள் உங்கள் வீட்டில் வளர்க்கும் தாவரங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

பூச்சாடி

பூக்களின் இதழ்களை மட்டும் பறித்து வெயிலில் உலர்த்தவேண்டும். அவை நன்றாக காய்ந்தவுடன் ஒரு பவுலில் சேர்த்து அதில் மேலும் சில மூலிகைகளை கலந்து, பட்டைப்பொடி தூவி, ஒரு அறையில் வைத்துவிட்டால், அந்த அறையே மணக்கும்.

இயற்கை டை

நீங்கள் இந்த பூக்களில் இருந்து இயற்கை துணிக்கு பயன்படுத்தும் டையை உருவாக்க முடியும். அடர்ந்த நிறங்கள் கொண்ட பூக்கள் என்றால், நீங்கள் அவற்றை வேகவைத்து டையாகப் பயன்படுத்தலாம். ரோஜா, சாமந்தி, செம்பருத்தி போன்ற பூக்களின் இதழ்களைப் பறித்து கொதிக்க வைத்து, உங்கள் வெள்ளை சட்டைகளுக்கு சாயமேற்றி, அவற்றுக்கு இயற்கை வண்ணத்தைக் கொடுக்கலாம்.

சரும பராமரிப்பு

ரோஜாப் பூக்களை நீங்கள் சரும பராமரிப்புக்குப் பயன்படுத்தலாம். ரோஜா இதழ்களைப் பறித்து, இரண்டு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவேண்டும், தண்ணீர் ஒரு லிட்டராக சுண்டவேண்டும். உங்களுக்கு கெமிக்கல் இல்லாத ரோஸ் வாட்டர் கிடைக்கும். இதை நீங்கள் குளிக்க பயன்படுத்தி பொலிவு பெறலாம்.

ஊதுபத்திகள்

பூஜைக்குப் பயன்படுத்தி மல்லிகை மற்றும் ரோஜாப்பூக்களை எடுத்து இதழ்களை மட்டும் உலர்த்த வேண்டும். அவை காய்ந்தவுடன் பொடியாக்கி, அதில் எசன்ஷியல் எண்ணெய் மற்றும் நெய் கலந்து, உருட்டி, ஒரு ஊதுபத்தி குச்சியில் அவற்றை தடவி காயவிடவேண்டும். பின்னர் அவற்றை பற்றவைக்கலாம். அது நல்ல மணத்தை தரும்.

இதழ் ஓவியங்கள்

காய்ந்த மலர்களை எடுத்து, நீங்கள் கலைப்பொருட்கள், ஓவியங்கள் செய்யலாம். உலர்ந்த மலர்களை புத்தகங்களில் சில வாரங்கள் அழுத்தி வைத்து காயவிடவேண்டும். பின்னர் அவற்றை நீங்கள் வரையும் ஓவியங்களில் ஒட்டி அழகான ஓவியத்தை உருவாக்கலாம் அல்லது ஃபிரஷ் பூக்களையும் உங்கள் ஓவியங்களில் ஒட்டலாம். இதனால் அவற்றின் வண்ணம் மற்றும் புத்துணர்வும் தக்கவைக்கப்படும்.

பூக்கள் சோப்

எஞ்சிய பூக்களின் இதழ்களை எடுத்து உதிர்த்து வைத்துக்கொள்ளவேண்டும். சோப் பேஸ்களை உருக்கிக்கொள்ளவேண்டும். அது நல்ல தண்ணீர் பதத்துக்கு வந்தவுடன், அதில் பூக்களை தூவி, சிம்மில் காய்ச்ச வேண்டும். மோல்ட்களில் ஊற்றி, அவை இறுகியதும் எடுத்து குளிக்கவேண்டும்.

பூ மெழுகுவர்த்திகள்

சோப்புகளைப்போலவே பூக்களில் மெழுகுவர்த்திகள் தயாரிக்கலாம். காய்ந்த மற்றும் ஃபிரஷ்ஷான மலர்களை உருகிய மெழுகில் கலக்கவேண்டும். அதை சிம்மில் வைத்து, மெழுகுவர்த்தி மோல்ட்களில் சேர்த்தால், நல்ல ஆர்கானிக் மெழுகுவர்த்திகள் தயார். இவற்றை வீட்டில் ஏற்றிக்கொள்ளலாம்.