International Translation Day: தகவல் பரிமாற்றத்திற்கான ஆதாரம் மொழி பெயர்ப்பு! மொழிப்பெயர்ப்பு நாளின் நோக்கம்!
International Translation Day: உலக அளவில் தகவல் பரிமாற்றத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்தது, மொழிப்பெயர்ப்பு எனும் அற்புதமான கருவி தான். ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு கருத்துக்களை பரிமாறிக்கொள்ள இந்த கருவி உதவுகிறது.

ஆதி காலத்தில் மனிதன் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள சைகை மொழியை பயன்ப்படுத்தினான். பின்னர் மொழிகள் தோன்றின. இந்தியாவிலேயே அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. உலக அளவில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. ஒரு நாட்டில் இருக்கும் ஒருவர் மற்ற நாடுகளில் உள்ளவருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் மொழிபெயர்ப்பு முக்கியமான தேவை ஆகும். உலக அளவில் தகவல் பரிமாற்றத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்தது, மொழிப்பெயர்ப்பு எனும் அற்புதமான கருவி தான். ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு கருத்துக்களை பரிமாறிக்கொள்ள இந்த கருவி உதவுகிறது.
மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தை கொண்டாடு விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 அன்று சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் வழியாக சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் என்பது மொழி வல்லுனர்களின் பணிக்கு மரியாதை செலுத்தும் வாய்ப்பாகும், இது நாடுகளை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, உரையாடல், புரிதல் மற்றும் ஒத்துழைப்பை எளிதாக்குகிறது, வளர்ச்சிக்கு பங்களிக்கிறது மற்றும் உலக அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.
மொழிப்பெயர்ப்பின் அவசியம்
ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு தொழில்நுட்பப் பணி உட்பட இலக்கியம் மற்றும் விஞ்ஞானப் பணி தொடர்பான கருத்துக்களை மாற்றுவதற்கு மொழிபெயர்ப்பு முறை மிகவும் உதவிகரமனதாக இருக்கு. விளக்கம் மற்றும் கலைச்சொற்கள் உள்ளிட்ட தொழில்முறை மொழிபெயர்ப்பு என்பது சர்வதேச பொது உரையாடல் மற்றும் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதில் தெளிவு, நேர்மறையான காலநிலை மற்றும் உற்பத்தித்திறனைப் பாதுகாக்க இன்றியமையாதது ஆகும்.