தின்னத்தின்ன தெவிட்டாத சுவை தரும்! தித்திக்கும் தேங்காய்ப்பால் அல்வா! விழாக் காலங்களை அழகாக்கும்!
தேங்காய்ப்பால் அல்வா செய்வது எப்படி?

தேங்காய்ப்பால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரக்கூடிய ஒன்றாகும். அதை நீங்கள் பழங்களுடன் சேர்த்து சாறு எடுத்தும் பருகலாம். பழங்களில் பால் கலந்து பருகுவதற்கு பதில் தேங்காய்ப்பால் சேர்த்து பழச்சாறுகளை பருகிப்பழகலாம். தேங்காய்ப்பாலில் பொதுவாக சாதம் செய்ய முடியும். அதன் சுவை பிரியாணிக்கே டஃப் கொடுக்கும். அசத்தல் சுவையில் தேங்காய்ப்பால் புலாவ் செய்வது எப்படி என்று பாருங்கள். இது பிரியாணி சுவையிலேயே இருந்தாலும், பிரியாணி செய்யும் முறையில் இருந்து கொஞ்சம் மாறுபடும். இதற்கு தொட்டுக்கொள்ள ரைத்தா மட்டுமே கூடபோதுமானதுதான். தேங்காய்ப்பால் உங்களுக்கு கொடுக்கும் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள். தேங்காய்ப்பால் சாதத்தை செய்வதற்கும் கற்றுக்கொள்ளுங்கள்.
தேங்காய்ப்பாலின் நன்மைகள்
தேங்காய்ப்பாலில் ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது லாக்டோஸ் இல்லாததது. தாவர அடிப்படையிலானது. நுண்ணுயிர்களுக்கு எதிரான மற்றும் பூஞ்ஜைகளுக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. அல்சரை குணப்படுத்துகிறது.
ஒரு கப் தேங்காய்ப்பாலில் 169 கலோரிகள் உள்ளது. 1.1 கிராம் புரதம் உள்ளது. 16.9 கிராம் கொழுப்பு, 14.6 கிராம் சாச்சுரேடட் கொழுப்பு, 3.3 கிராம் கார்போஹைட்ரேட், 2.0 கிராம் சர்க்கரை உள்ளது.