எச்சரிக்கை பெண்களே! நீங்கள் சாப்பிடும்போது உங்களுக்கு இந்த அறிகுறிகள் தோன்றுகிறதா?
நீங்கள் சாப்பிடும்போது உங்களுக்கு இந்த அறிகுறிகள் தோன்றினால், அது புற்றுநோயாக இருக்கலாம்.

புற்றுநோயை எதிர்த்து போராடுவதில் சிறந்த வழியாக உங்களுக்கு ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டுபிடிப்பது உள்ளது. இந்த நிலையில் கண்டுபிடித்துவிட்டால், உங்களின் வாழ்நாள் நீட்டிக்கப்படலாம். பல்வேறு வகை புற்றுநோய்களுள், கருப்பை புற்றுநோய் என்பதுதான், கண்டுபிடிப்பதற்கு கடும் சவாலான ஒன்றாகும். இதன் அறிகுறிகள் உங்களை குழப்பமடையச் செய்யும். அதன் அறிகுறிகளைப் பார்த்தால், உங்களுக்கு குழப்பம் தோன்றும். குறிப்பாக சாப்பிட்ட பின் ஏற்படும் அறிகுறிகள், உங்களுக்கு இந்த புற்றுநோயைக் கண்டுபிடிக்க ஏதுவாக இருக்கும். அமெரிக்க புற்றுநோய் கழக்கத்தின் கூற்றுப்படி, 29 சதவீத புற்றுநோய்கள் மட்டுமே ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த புற்றுநோயை ஆரம்ப காலத்திலே கண்டுபிடித்துவிட்ட பெண்கள் 94 சதவீதம் பேர் வியாதி கண்டுபிடிக்கப்பட்ட 5 ஆண்டுகளுக்குப் பின்னரும் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
கருப்பை புற்றுநோய்
கருப்பை புற்றுநோய் என்பது கருப்பையின் திசுக்களில் உருவாகும் ஒன்றாகும். இது பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளுள் ஒன்று. கருப்பை என்பது இரண்டு சிறிய உறுப்புகள். இங்குதான் கருமுட்டைகள் சேகரிக்கப்படுகின்றன. இது 78 பெண்களில் ஒருவருக்கு ஏற்படுகிறது. எந்த வயதிலும் கருப்பை புற்றுநோய் ஏற்படலாம். இது 50 வயதுக்கு மேல் பொதுவான ஒன்றாக உள்ளது. கட்டி சிறியதாக இருக்கும்போது ஆரம்ப கட்டத்திலே கண்டுபிடிக்கப்பட்டால், 90 சதவீதம் குணமடைய வாய்ப்பு உள்ளது. ஆரம்ப கட்டத்திலே கண்டுபிடிப்பது உயிருடன் இருக்கும் காலத்தை நீட்டிக்கிறது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் அது கடைசி கட்டங்களிலேயே கண்டுபிடிக்கப்படுகிறது. வயிற்று வலி, உப்புசம், பசியின்மை, சிறுநீரில் மாற்றம் ஆகியவை அறிகுறிகளாக உள்ளன. கருப்பையை நீக்கியவர்களுக்குக்கூட கருப்பை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது உங்கள் ஃபெல்லோபியன் குழாய்களை தாக்குகிறது.
அறிகுறிகள்
இந்த அறிகுறிகள் அடிக்கடி ஏற்பட்டால் கவனம் தேவை. இது மாதத்தில் 12 முறைக்கு மேல் வந்தால், இது உங்களுக்கான எச்சரிக்கை அறிகுறியாகும்.