உங்கள் முகம் தங்கம் போல் ஜொலிக்க வேண்டுமா? வீட்டிலே தயாரிக்கலாம் ஃபேஸ் ஜெல்; எப்படி செய்யலாம்?
உங்கள் முகத்தை தங்கம்போல் ஜொலிக்க வைக்கும் ஃபேஸ் ஜெல்லை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். மேலும் இன்றைய மாசுபாட்டால் நமக்கு சரும தொற்றுகள் முதல் புற்றுநோய்கள் வரை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. முடி உதிர்வு என நம் அழகையும் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. அதற்கும் வீட்டிலிருந்தே நாம் சில தீர்வுகளை பின்பற்ற முடியும். எனவே நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும், அழகையும் பராமரிக்க சில மருத்துவகுறிப்புக்களையும் அழகு குறிப்புக்களையும் தெரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
தேவையான பொருட்கள்
பாதாம் – 10
கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன்
பாதாம் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
வைட்டமின் இ எண்ணெய் – 5 சொட்டுகள்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
செய்முறை
பாதாமை இரவே ஊறவைத்துவிடவேண்டும். காலை அதன் தோல்களை நீக்கிவிட்டு, மிக்ஸி ஜாரில் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அரைத்து சுத்தமாக காட்டன் துணியில் வடிகட்டி அதன் பாலை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
அதில் கற்றாழை ஜெல், பாதாம் எண்ணெய், வைட்டமின் இ எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவேண்டும். அது ஒரு ஜெல்போன்ற கிரீம் பதத்துக்கு வரும். அதை எடுத்து ஒரு காற்றுப்புகாத பாட்டில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
இதை ஃபிரிட்ஜில் வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம். இந்த ஜெல்லை தினம் இரவு உறங்கச் செல்லும் முன் மற்றும் காலையிலும் என இரண்டு வேளையும் தடவி வந்தால் உங்கள் முகம் தங்கம்போல் ஜொலிக்கும்.
இதை நீங்கள் வீட்டிலே தயாரித்துக்கொள்ளலாம். இது உங்கள் சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளும். இதனால் உங்கள் சருமம் பொலிவாகும். முகத்தில் பருக்கள், கருவளையங்கள், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் ஆகியவை இருக்காது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள் ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்