சாஃப்ட்டான, பஞ்சு போன்ற, மிருதுவான இட்லியை சுடச்சுடச் சூட ஆவி பறக்க சாப்பிடவேண்டுமா? உளுந்து அரைக்கும் பக்குவம் இதுதான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சாஃப்ட்டான, பஞ்சு போன்ற, மிருதுவான இட்லியை சுடச்சுடச் சூட ஆவி பறக்க சாப்பிடவேண்டுமா? உளுந்து அரைக்கும் பக்குவம் இதுதான்!

சாஃப்ட்டான, பஞ்சு போன்ற, மிருதுவான இட்லியை சுடச்சுடச் சூட ஆவி பறக்க சாப்பிடவேண்டுமா? உளுந்து அரைக்கும் பக்குவம் இதுதான்!

Priyadarshini R HT Tamil
Updated Oct 12, 2024 02:48 PM IST

சாஃப்ட்டான, பஞ்சு போன்ற, மிருதுவான இட்லியை சுடச்சுடச் சூட ஆவி பறக்க சாப்பிடவேண்டுமா? அதற்கு அரிசி, உளுந்து அரைக்கும் பக்குவத்தை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். அது எப்படி என்று பார்க்கலாம்.

சாஃப்ட்டான, பஞ்சு போன்ற, மிருதுவான இட்லியை சுடச்சுடச் சூட ஆவி பறக்க சாப்பிடவேண்டுமா? உளுந்து அரைக்கும் பக்குவம் இதுதான்!
சாஃப்ட்டான, பஞ்சு போன்ற, மிருதுவான இட்லியை சுடச்சுடச் சூட ஆவி பறக்க சாப்பிடவேண்டுமா? உளுந்து அரைக்கும் பக்குவம் இதுதான்!

இதனுடன் தயிரின் தண்ணீர் மற்றும் மசாலாக்கள் சேர்த்து இட்லி தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று நாம் சாப்பிடும் நவீன இட்லி நமக்கு இந்தோனேசியாவில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் அங்குதான் புளிக்க வைத்து உணவு தயாரிக்கும் முறை பாராம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தோனேசியாவில் இந்து அரசர்கள் அமர்த்திய சமையல் கலைஞர்கள் இட்லியை கண்டுபிடித்திருக்கலாம். அங்கிருந்து இந்த உணவு இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தோனேசியாவில் கெட்லி என்ற உணவு இட்லிபோலேவே இருக்கும் என்று வரலாறு கூறுகிறது. மேலும் புளிக்கவைக்கும் செயல்பாடு இயற்கையில் நடக்கும் ஒன்று என்பதால் அது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இங்கு அனைத்து கலாச்சாரங்களிலும் புளிக்க வைக்கும் பழக்கம் உள்ளது.

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி – 3 டம்ளர்

பச்சரிசி – 1 டம்ளர்

வெள்ளை உருட்டு உளுந்து – முக்கால் டம்ளர்

வெந்தயம் – ஒரு ஸ்பூன்

செய்முறை

அரிசியைக் கழுவி 4 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும். உளுந்தை கழுவி 2 மணி முதல் 3 மணி நேரம் வரை ஊறவைத்துக்கொண்டால் போதும். வெந்தயத்தை தனியாக ஒரு மணி நேரத் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.

அனைத்தையும் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். மாவு அரைக்கும்போது முதலில் உளுந்தைதான் அரைக்க வேண்டும். உளுந்தை தண்ணீர் விடாமல் கொஞ்சம் மட்டும் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

உளுந்துக்கு தண்ணீர் சேர்த்தும்போது ஊற்றக்கூடாது. தெளிக்க மட்டுமே வேண்டும். உளுந்தை நல்ல கெட்டியாக பஞ்சுபோல் அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். உளுந்துடன் வெந்தயத்தையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

உங்கள் வீட்டில் பானை இருந்தால் அதில் ஊற்றி வைக்கும் தண்ணீரை ஊற்றியோ அல்லது ஃபிரிட்ஜில் இருக்கும் ஜில் தண்ணீரை ஊற்றியோ உளுந்து அரைப்பது நல்லது.

அப்போதுதான் மாவு சூடாகி விரைவில் புளிக்காமல் இருக்கும். உளுந்து வழிக்கும்போது பந்துபோல் வரவேண்டும். அப்போதுதான் இட்டி பஞ்சுபோல் இருக்கும்.

அடுத்து அதில் அரிசியை அரைத்து சேர்க்கவேண்டும். அரிசி முழுவதும் மசிந்துவிடக்கூடாது. கொஞ்சம் கொரகொரப்பாக இருக்க வேண்டும். அப்போதுதான் இட்லி மிருதுவாக இருக்கும்.

இரண்டையும் கைகளால் சேர்த்து மிருதுவாக தேவையான அளவு உப்பு சேர்த்து 8 மணி நேரம் அல்லது ஓரிரவு புளிக்க வைத்துக்கொள்ளவேண்டும்.

ஓரிரவு புளித்துவிட்டால் அது பொங்கி வந்திருக்கும். இட்லி செய்வதற்கு முன், அந்த மாவை கரண்டியில் மிருதுவாக கலந்துவிடவேண்டும். பின்னர் பந்துபோல் எடுத்து இட்லி தட்டில் ஊற்றவேண்டும். இப்போது உங்களுக்கு சாஃப்பட்டான, பஞ்சு போன்ற, மிருதுவான இட்லி உங்களுக்கு கிடைக்கும்.