ரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டுமா? இதோ ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை இப்படி செய்ங்க!
ரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டுமா? அதற்கு ஒரு பிடி கறிவேப்பிலை போதும். அதை இப்படி செய்து பாருங்கள்.

மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். மேலும் இன்றைய மாசுபாட்டால் நமக்கு சரும தொற்றுகள் முதல் புற்றுநோய்கள் வரை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. முடி உதிர்வு என நம் அழகையும் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. அதற்கும் வீட்டிலிருந்தே நாம் சில தீர்வுகளை பின்பற்ற முடியும். எனவே நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும், அழகையும் பராமரிக்க சில மருத்துவகுறிப்புக்களையும் அழகு குறிப்புக்களையும் தெரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
நமது சாப்பாட்டில் அன்றாடம் பயன்படுத்தப்படும் ஒரு பொருள். ஆனால் நாம் அதை வேண்டாம் என்று வீசிவிடுவோம். ஆனால் அதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. சாப்பாட்டில் சேர்க்கும்போதுதான் நாம் அதை தூக்கி வீசிவிடுகிறோம். இதுபோல் செய்து பருகுவது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு