முகத்தில் சுருக்கம் இருக்கா.. ஆரோக்கியமான, பளபளப்பான சருமம் வேண்டுமா? ஊறவைத்த பச்சை பயிறு சாப்பிடுங்க போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  முகத்தில் சுருக்கம் இருக்கா.. ஆரோக்கியமான, பளபளப்பான சருமம் வேண்டுமா? ஊறவைத்த பச்சை பயிறு சாப்பிடுங்க போதும்!

முகத்தில் சுருக்கம் இருக்கா.. ஆரோக்கியமான, பளபளப்பான சருமம் வேண்டுமா? ஊறவைத்த பச்சை பயிறு சாப்பிடுங்க போதும்!

Divya Sekar HT Tamil Published Nov 20, 2024 07:00 AM IST
Divya Sekar HT Tamil
Published Nov 20, 2024 07:00 AM IST

ஊறவைத்த பச்சை பயிறு நார்ச்சத்து நிறைந்தது, ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. மலச்சிக்கலைத் தடுக்கவும், குடலைச் சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. ஊறவைத்த பச்சை பயிறில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருக்கும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

முகத்தில் சுருக்கம் இருக்கா.. ஆரோக்கியமான, பளபளப்பான சருமம் வேண்டுமா? ஊறவைத்த பச்சை பயிறு சாப்பிடுங்க போதும்!
முகத்தில் சுருக்கம் இருக்கா.. ஆரோக்கியமான, பளபளப்பான சருமம் வேண்டுமா? ஊறவைத்த பச்சை பயிறு சாப்பிடுங்க போதும்!

புரதத்தின் வளமான ஆதாரம்

ஊறவைத்த பச்சை பயிறு புரதத்தின் வளமான மூலமாகும், அவற்றை உட்கொள்வது உடலுக்கு தேவையான புரதங்களை வழங்கும். பி வைட்டமின்கள், இரும்புச்சத்து, மெக்னீசியம், ஊறவைத்த பச்சை பயிறு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது

நார்ச்சத்து நிறைந்தது, ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. மலச்சிக்கலைத் தடுக்கவும், குடலைச் சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. ஊறவைத்த பச்சை பயிறில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருக்கும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த இந்த ஊறவைத்த பச்சை பயிறு முழுமை உணர்வைத் தருகிறது. எடை மேலாண்மைக்கு உதவும். ஃபிளாவனாய்டுகள் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள இது, உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகிறது.

கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது

இதில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் ஏ, சி மற்றும் ஜிங்க் போன்ற கூறுகள் உள்ளன.

சருமத்திற்கு நன்மை பயக்கும்

தோல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் சுருக்கங்களைத் தடுக்க உதவுகிறது. மக்னீசியம், பி வைட்டமின்கள் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. நாள் முழுவதும் கவனம் செலுத்த உதவுகிறது.

பச்சை பயிறு சாதம்

இந்த ஆரோக்கியமான பச்சை பயிறு வைத்து சாதம் செய்யலாம்.அது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். ஒரு கப் அரிசிக்கு அரை கப் பச்சை பயிரை எடுத்து கொள்ள வேண்டும். இரண்டையும நன்றாக கழுவி ஊற விட வேண்டும். அரிசி பருப்பு இரண்டும் சேர்த்து ஒரு மணி நேரம் பிறகு இரண்டு பெரிய வெங்காயத்தை நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு தக்காளியையும் நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.

ஒரு சூடான கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் 2 ஸ்பூன் கடலை பருப்பை சேர்த்து கொள்ளவேண்டும். கடலை பருப்பு சிவந்து வரும் போது அதில் ஒரு ஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொள்ள வேண்டும்.

கடுகு உளுத்தம்பருப்பு வெடித்த பின் அதில் இரண்டு கொத்து கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும். அதில் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். பெரிய வெங்காயம் வதங்கிய உடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி வதங்கிய பின் அதில் இரண்டு ஸ்பூன் சாம்பார் தூள் மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து வதக்க வேண்டும். இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.

ஒன்றரை கப் அரிசி மற்றும் பச்சை பயிறுக்கு நான்கரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்றாக கொத்தித்து வந்த பிறகு அதில் அரிசி பருப்பை சேர்த்து குக்கரை மூட வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும். குக்கரை திறந்தவுடன் அதில் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் ஒரு கைபிடி பொடியாக நறுக்கிய மல்லி இழையை சேர்க்க வேண்டும். அவ்வளவு தான் ஈஷியான பச்சை பயிறு சாதம் ரெடி. பச்சை பயிறை முளை கட்டி செய்தால் மேலும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.