வீட்டு அலங்கார குறிப்புகள் : உங்கள் வீட்டில் கிரிஸ்டல் ஆமைகளை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
வீட்டு அலங்கார குறிப்புகள் : உங்கள் வீட்டில் நீங்கள் அழகுக்காக கிரிஸ்டல் ஆமை பொம்மையை வைக்கும்போது, அது உங்கள் வீட்டுக்கு வாஸ்துபடி அதிகமான வெற்றியைக் கொண்டு வருகிறது.

கிரிஸ்டல் ஆடைகள் என்பது என்ன?
முதலில் கிரிஸ்டல் ஆமைகள் வீடுகளில் அலங்காரப் பொருளாகத்தான் இருந்தது. இதை இயற்கை கற்களில் செய்தார்கள். ஜேட், ரோஸ் குவார்ட்ஸ், அமெதிஸ்ட் அல்லது கிளியர் குவார்ட்ஸ் போன்ற இயற்கை கிறிஸ்டல்களால் உருவாக்கப்படும். அதன் பெயருக்கு ஏற்றவாறு ஆமை வடிவில் இருக்கும். இதை நீங்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தியானம் செய்யும் அறைகளில் வைக்கும்போது அது உங்களுக்கு வெற்றியைக் கொண்டு வருகிறது.
ஏன் ஆமை வடிவம்
கிறிஸ்டல் ஆமை, பாதுகாப்பின் அம்சமாகக் கருதப்படுகிறது. இது உங்கள் இல்லத்துக்கு அளவற்ற அதிகப்படியான செல்வத்தைக் கொண்டுவருகிறது. நிலையான மற்றும் பலம் வாய்ந்த என்பதன் அடையாளமாக இந்த ஆமை பொம்மைகள் சில கலாச்சாரங்களில் உள்ளது. பெங்ஃசூயில் நீண்ட வாழ்வு மற்றும் நிலைத்தன்மைக்கு அடையாளமாக விளங்குகிறது. இது உள்புற காயங்களை ஆற்றவும், உங்கள் வீட்டின் செல்வத் தடையை நீக்கவும் உதவுகிறது.
அது எப்படி உதவும்?
கிரிஸ்டல் ஆமைகள், உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை உறிஞ்சும். அமைதியைக் கொண்டுவரும். உங்கள் வீட்டிற்கு நேர்மறையான எண்ணங்களைக் கொண்டுவரும். அதை நீங்கள் வைக்கும் இடங்களில் மங்களம் நிறையும். ஒரு இடத்தின் ஆற்றலை சமப்படுத்தும். மக்களிடம் கவனத்தை அதிகரிக்கும். உங்கள் வீட்டில் பணத்தடை இருந்தால் அதை சரிசெய்யும்.
பல்வேறு ஆமை பொம்மைகளின் ஆன்மீக நன்மைகள்
பல்வேறு கிரிஸ்டல் பொம்மைகள் மற்றும் பொருட்களில் இருந்தும் ஆமை பொம்மைகள் தயாரிக்கப்படும். ஜேட், ரோஸ் வுட் என பல்வேறு வகை மெட்டல்கள், மரங்களில் இருந்தும் ஆமை பொம்மைகள் தயாரிக்கப்படும். ஜேட்டில் தயாரிக்கப்படும் ஆமை பொம்மைகள் செல்வத்தை கவர்ந்திழுக்கும் என்று கருதப்படுகிறது. ரோஸில் தயாரிக்கப்படும் ஆமை பொம்மைகள், அன்பைக் கொண்டுவருவதாக எண்ணப்படுகிறது. தெளிவான கற்களில் இருந்து தயாரிக்கப்படும் ஆமை பொம்மைகள் ஆற்றலுடன் இன்னும் சில விஷயங்களைக் கொண்டுவரும்.
கிரிஸ்டல் ஆமை பொம்மையை வைக்கும் திசை
வாஸ்து மற்றும் ஃபெங்சூவின்படி, உங்கள் வீட்டில் வடக்கு திசைதான் கிரிஸ்டல் ஆமை பொம்மையை வைக்க ஏற்ற திசையாகும். இது உங்களுக்கு வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கவும், வாழ்வில் வளர்ச்சியைக் கொண்டுவரவும், உங்களுக்கு பணம் வரும் பாதையில் உள்ள தடைகளை நீக்கவும் உதவுகிறது. இன்னும் பல்வேறு நன்மைகளையும் கொடுக்கும்.
ஆமை பொம்மையை வைக்க மற்றொரு சரியான திசை
வடக்கு திசையைத் தவிர நீங்கள் தென் கிழங்கு திசையின் மூலையில் வைத்தால் உங்கள் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் நிரம்பி வழியும். இந்த மூலை பணத்தை ஈர்க்க உதவும். லாபகரமான வாய்ப்புக்களை இழுக்கும் திசையாகும்.
ஆடை பொம்மையை வைக்க சரியான இடம்
எந்த திசையில் வைத்தாலும், தரையில் வைக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்துங்கள். அதேபோல் தாழ்வான இடங்களிலும் வைக்கக் கூடாது. ஒரு மேடை அமைத்து அதில்தான் வைக்கவேண்டும். ஒரு ஷெல்ஃப் அல்லது டெஸ்க் ஆகியவற்றில் வைக்கலாம். எங்கு வைத்தாலும் மேல இருக்கவேண்டும். அதை சுற்றி எவ்வித குப்பை அல்லது அழுக்குகளும் இருக்கக்கூடாது. அந்த இடம் சுத்தமாக இருக்கவேண்டும்.
பயன்படுத்துவது எப்படி?
பெரும்பாலானவர்கள் ஆமை பொம்மையை வைத்துக்கொண்டு தியானம் செய்வார்கள். உறங்கும்போது ல்லது வேலை செய்யும்போது அவர்களின் அருகில் வைத்துக்கொள்வார்கள். சிலர், அவர்களைச் சுற்றி ஆமை பொம்மையை வைத்திருக்கும்போது, மனஅழுத்தம் இல்லாமல் உணர்கிறார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
சுத்தம் செய்வது
இந்த ஆமை பொம்மையை நீங்கள் சுத்தமாக வைத்துக்கொள்ளும்போது அதன் சக்தி அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இதை நீங்கள் தண்ணீரில் கழுவவேண்டும். குறிப்பாக குளிர்ந்த நீரில் கழுவிவிட்டு, நிலவொளியில் காயவைத்துக்கொள்ளவேண்டும். அதில் தூசி சேராமல் பார்த்துக்கொள்வது நல்லது. தினமுமே துடைத்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக துணி அல்லது டிஷ்யூவைப் பயன்படுத்துங்கள்.
நினைவில்கொள்ள வேண்டியது என்ன?
கிறிஸ்டல் ஆமையை நீங்கள் வைத்திருக்கும்போது நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால், அது உங்கள் வீட்டில் ஆற்றல் நிறைய உதவும். ஒரே இரவில் உங்களின் வாழ்க்கையை அது மாற்றிவிடாது.
சிறந்த பரிசுப் பொருள்
கிறிஸ்டல் ஆமை ஒரு சிறந்த பரிசுப் பொருள் தேர்வாகும். இது வாஸ்து மற்றும் ஃபெங்சூ இரண்டிலும் இது செல்வச் செழிப்பை கொண்டு வரும் என்று கருதப்படுகிறது. ஆனால் இந்தப் பரிசுப் பொருளை நீங்கள் ஒருவருக்கு கொடுப்பீர்கள் என்றால், அதன் பலம் என்னவென்றும், எந்த திசையில் வைக்கவேண்டும் என்றும் அதன் மற்ற நன்மைகளையும் கூறுங்கள்.

டாபிக்ஸ்