உரப்பு அடை : தஞ்சாவூர் சின்ன வெங்காய உரப்பு அடை எப்படி செய்வது தெரியுமா? சைட் டிஷ் தேவையில்லை!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உரப்பு அடை : தஞ்சாவூர் சின்ன வெங்காய உரப்பு அடை எப்படி செய்வது தெரியுமா? சைட் டிஷ் தேவையில்லை!

உரப்பு அடை : தஞ்சாவூர் சின்ன வெங்காய உரப்பு அடை எப்படி செய்வது தெரியுமா? சைட் டிஷ் தேவையில்லை!

Priyadarshini R HT Tamil
Updated Mar 26, 2025 09:57 AM IST

உரப்பு அடை : தஞ்சாவூர் சின்ன வெங்காய கார அடை செய்வது எப்படி என்று பாருங்கள். இதற்கு தொட்டுக்கொள்ள பெரிதாக எதுவும் தேவையில்லை. நாட்டுச்சர்க்கரை மட்டும் கூட போதுமானது.

உரப்பு அடை : தஞ்சாவூர் சின்ன வெங்காய உரப்பு அடை எப்படி செய்வது தெரியுமா? சைட் டிஷ் தேவையில்லை!
உரப்பு அடை : தஞ்சாவூர் சின்ன வெங்காய உரப்பு அடை எப்படி செய்வது தெரியுமா? சைட் டிஷ் தேவையில்லை! (Goya)

தேவையான பொருட்கள்

• புழுங்கல் அரிசி – 3 கப்

அல்லது

• இட்லி அரிசி – 3 கப்

• கடலை பருப்பு – முக்கால் கப்

• துவரம் பருப்பு – முக்கால் கப்

• பாசிப் பருப்பு – முக்கால் கப்

• உளுந்தம் பருப்பு – முக்கால் கப்

• வர மிளகாய் – 15

• பூண்டு – 8 பல்

• சோம்பு – 2 ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• சின்ன வெங்காயம் – 100 கிராம் (பொடியாக நறுக்கியது)

• முருங்கைக்கீரை – இரண்டு கைப்பிடியளவு (சுத்தம் செய்தது)

• தேங்காய்த் துருவல் – ஒரு கப்

• பெருங்காயத் தூள் – இரண்டு சிட்டிகை

செய்முறை

1. இந்த அரிசி மற்றும் பருப்பு இரண்டையும் தனித்தனியாக அலசி 4 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.

2. ஊறிய அரிசி மற்றும் பருப்பை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும். அதில் வர மிளகாய், பூண்டு, சோம்பு சேர்த்து அரைத்து உப்பு போட்டு கலந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

3. இந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், சுத்தம் செய்த முருங்கைக்கீரை, தேங்காய்த் துருவல் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்துகொள்ளவேண்டும்.

4. இதை தோசைக்கல்லில் சேர்த்து அடைகளாக வார்த்து எடுத்துக்கொள்ளவேண்டும். சூப்பர் சுவையான தஞ்சாகூர் உரப்பு அடை தயார்.

இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு தொட்டுக்கொள்ள சாம்பார், சட்னி என எதுவும் நன்றாக இருக்கும் அல்லது அவியல், வெஜிடபிள் ஸ்டூ என எதையும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இவையனைத்தையும் விட நாட்டுச்சர்க்கரையைத் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.