Home Remedy : இந்த பானத்தில் இப்படி ஒரு நன்மையா? இது தெரிந்தால், நீங்கள் குஷி தான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Home Remedy : இந்த பானத்தில் இப்படி ஒரு நன்மையா? இது தெரிந்தால், நீங்கள் குஷி தான்!

Home Remedy : இந்த பானத்தில் இப்படி ஒரு நன்மையா? இது தெரிந்தால், நீங்கள் குஷி தான்!

Priyadarshini R HT Tamil
Updated Sep 28, 2024 04:20 PM IST

Home Remedy : நம் வயிற்றையும், குடலையும் பாதுகாப்பதாக நம்பப்படும் இந்த பானம், கசகசா மூலம் தயாரிக்கப்படுகிறது. எப்படி தயாரிப்பது? என்ன தேவை? இதோ பார்க்கலாம்.

Home Remedy : இந்த பானத்தில் இப்படி ஒரு நன்மையா? இது தெரிந்தால், நீங்கள் குஷி தான்!
Home Remedy : இந்த பானத்தில் இப்படி ஒரு நன்மையா? இது தெரிந்தால், நீங்கள் குஷி தான்!

அல்சரின் அறிகுறிகள்

  • வயிறு எரிச்சல்
  • வயிறு வலி
  • வயிறு உப்புசம், வயிறு நிறைந்த உணர்வு
  • கொழுப்பு உணவுகளை ஏற்காமை
  • நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் ஆகிய அறிகுறிகள் தோன்றும்.

தீவிர அல்சர் பிரச்னைகள் ஏற்பட்டால்

  • வாந்தி
  • ரத்த வாந்தி,
  • கருப்பாக மலம் கழித்தல்,
  • மூச்சுத்திணறல்
  • மயக்கம்
  • சோர்வு
  • வாந்தி
  • உடல் எடையிழப்பு
  • பசியின்மை
  • பசியில் மாற்றம்

எப்போது மருத்துவரை அணுகவேண்டும்?

உங்களுக்கு இந்த அறிகுறிகள் தீவிரமாகும்போது, உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே அல்சருக்கு நல்லது. நீங்களாகவே செரிமான மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும்.

மருத்துவர்கள் கூற்றுப்படி, அல்சர் இருப்பவர்களுக்கு மேல் வயிற்றில் நடுப்பகுதியில் வலி இருக்கும். கடும் அல்சராக இருந்தால், வயிற்றுக்குள் இருக்கக்கூடிய புண் கடுமையாகி உள்ளே ரத்தக்கசிவு ஏற்பட்டு, மலம் கருப்பாகிவிடும்.

பாரம்பரிய வீட்டு வைத்தியத்தில் இந்த அல்சரிலிருந்து பாதுகாக்க சில முறைகளை பின்பற்றுகின்றனர். அதில் ஒன்றைத்தான் நீங்கள் இன்று தெரிந்துகொள்ளப்போகிறீர்கள். பலனளிப்பதாக கருதப்படும் அந்த பானத்தை தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

கசகசா – 2 ஸ்பூன்

தேங்காய் துருவல் – அரை கப்

செய்முறை

கசகசாவை இரவு முழுவதும் ஊறவைத்துவிடவேண்டும். அடுத்த நாள் காலையில் அதில் தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். அதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் பருகினால் பலன் தெரியும் என்கிறார்கள், பயன்படுத்தும் சிலர்.  இந்த கலவையில் அதிகம் தண்ணீர் சேர்த்து பருகினால், இதை பருகியபின் வேறு எதையும் பருகக்கூடாது என்கிறார்கள். மூன்று மணி நேர இடைவேளைக்குப்பின்னர் காலை உணவை எடுத்துக்கொள்ளும் முறையை, முந்தைய காலங்களில் சிலர் பின்பற்றியதாக கூறப்படுகிறது. 

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.