மஞ்சள் நல்லதுதான்; ஆனால் கொஞ்சம் அதிகமானாலும் அச்சச்சோ இத்தனை ஆபத்துக்களா?
நாம் அன்றாடம் சேர்க்கும் மஞ்சள் அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன?

மஞ்சள் உடலுக்கு நல்லது தரும் மூலிகையாகவும், உணவாகவும் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பாரம்பரிய மருத்துவம் மற்றும் அன்றாட சமையல் என பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக ஆயுர்வேதத்தில் மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற உட்பொருள், மஞ்சளுக்கு அதன் நிறத்தைக்கொடுப்பது, பல்வேறு நன்மைகளை உடலுக்கு கொடுத்து வருகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இதில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இதை உங்கள் உணவில் கட்டாயம் சேர்க்கவேண்டும் என்று வலியுறுத்தப்படுவதற்கான காரணங்கள் இவை. ஆனால் நாம் வீட்டில் பொதுவாக மஞ்சளை உபயோகிக்கும்போது, கால் ஸ்பூன் வரைதான் பயன்படுத்துவோம். சாம்பார், ரசம், பொரியல், கிரேவி என எதில் சேர்த்தாலும் அதன் அளவு 4 முதல் 5 பேர் கொண்ட சமையலுக்கு கால் ஸ்பூன் மட்டும்தான். நிறத்துக்காக மட்டும்தான். அதை அதிகம் சேர்த்தால் என்னவாகும் பார்க்கலாமா?
ஆரோக்கியமான உணவின் அங்கமாக உள்ள மஞ்சள் ஆபத்தானதா?
ஆம். மஞ்சளில் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும், இதை அளவுக்கு மேல் உட்கொள்ளும்போது, அது உங்கள் உடலில் எண்ணற்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அது என்ன மாதிரியான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது என்று பார்க்கலாம்.
செரிமான கோளாறுகள்
மஞ்சள்தான் நம் உடலில் பித்த உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் வயிற்றில் உள்ள ஆசிட் அளவு அதிகரிக்கவும் உதவுகிறது. ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரையில், அதிகம் மஞ்சள் சாப்பிட்டால் அது செரிமான நெருப்பை அதிகம் தூண்டிவிடும். இதனால் உங்கள் உடலில் சூடு அதிகரிக்கும். ஏற்கனவே சூட்டு உடல் வாகு கொண்டவர்களுக்கு இது நல்லதல்ல. சிலருத்து இது செரிமானத்தைக்கொடுக்கும். குறிப்பாக அவர்களின் கொழுப்பைக் குறைக்கும். எனினும், வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவை அதிகரிக்கும். இது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். செரிமான மண்டலத்தில் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கேஸ்ட்ரோஈசோஃபாஜெல் ரிஃப்ளக்ஸ், ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் மற்ற கேஸ்ட்ரோஇன்டஸ்டைனல் உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.