எலும்பை பலப்படுத்தும் கருப்பு உளுந்தில் இப்படி காரசாரமா பொடி செஞ்சு பாருங்க.. எக்ஸ்ட்ரா இரண்டு இட்லி கேப்பாங்க! சத்தானது
கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானமும் எளிதாகும். நீரிழிவு நோயாளிகள் கருப்பு உளுந்தை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு ஒழுங்குபடுத்தப்படும். இந்த கருப்பு உளுந்தில் ருசியான இட்லி பொடியை செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்.

இன்றைய அவரச உலகில் பல வீடுகளில் தினமும் இட்லி, தோசை தான் காலை, இரவு என இரண்டு நேரமும் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இந்த இட்லி தோசைக்கு என்னதான் சட்னி, சாம்பார் என இருந்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பது இட்லி பொடிதான். உங்கள் வீட்டில் இந்த இட்லிப்பொடியை இன்றும் சத்தானதாக கொடுக்க கறுப்பு உளுந்து பயன்படுத்துங்கள். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் நல்லது. கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, அதிகம் உள்ளது. தினமும் உளுந்தை உணவில் சேர்த்து வருவது முதுகு வலி, மூட்டு வலி நீங்கும். எலும்புகளை பலப்படுத்த கருப்பு உளுந்து மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானமும் எளிதாகும். நீரிழிவு நோயாளிகள் கருப்பு உளுந்தை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், இத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு ஒழுங்குபடுத்தப்படும். இந்த கருப்பு உளுந்தில் ருசியான இட்லி பொடியை செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்.
கருப்பு உளுந்து இட்லி பொடி செய்ய தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து – 1 கப்
கடலை பருப்பு – அரை கப்