Triphala Choranam : இந்த இரண்டு பொருள் போதும்! தலைமுடி ஆரோக்கியம் சிறக்கும்! சருமம் பளபளக்கும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Triphala Choranam : இந்த இரண்டு பொருள் போதும்! தலைமுடி ஆரோக்கியம் சிறக்கும்! சருமம் பளபளக்கும்!

Triphala Choranam : இந்த இரண்டு பொருள் போதும்! தலைமுடி ஆரோக்கியம் சிறக்கும்! சருமம் பளபளக்கும்!

Priyadarshini R HT Tamil
Published Jun 01, 2024 01:34 PM IST

Tripala Choranam : மோர் மற்றும் திரிபலா சூரணம் என்ற இரண்டு பொருள் மட்டும் போதும். தலைமுடி ஆரோக்கியம் அதிகரிக்கும். சருமம் பளபளக்கும்!

மோரில் உள்ள புரோபயாடிக்குகள் இயற்கையான pH அளவை சமநிலைப்படுத்துவதன் மூலம் தலை ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இது பொடுகை எதிர்த்துப் போராடவேண்டும். அது மீண்டும் வருவதைத் தடுக்கவும் உதவுகிறது,
மோரில் உள்ள புரோபயாடிக்குகள் இயற்கையான pH அளவை சமநிலைப்படுத்துவதன் மூலம் தலை ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இது பொடுகை எதிர்த்துப் போராடவேண்டும். அது மீண்டும் வருவதைத் தடுக்கவும் உதவுகிறது, (Pinterest)

உங்கள் தலைமுடி இழந்த பிரகாசத்தை மீட்டெடுக்க ஒரு பழமையான ஆயுர்வேத தீர்வு, மோர் மற்றும் திரிபலா சூரணத்தை சேர்த்து, ்தலையில் ஓரிவு ஊறவைத்தால் உங்களுக்கு அது நல்ல பலனைத்தரும். இதனால் உங்கள் தலைமுடி பளபளக்கும், மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும். வேரில் இருந்து உங்கள் தலைமுடியை பாதுகாக்க உதவுகிறது. 

தலையை முழுமையாக சுத்தம் செய்வதைத் தவிர, இது முடி முன்கூட்டியே நரைப்பதையும் தடுக்கிறது. மோரில் உள்ள லாக்டிக் அமிலம், சாதாரண ஆல்பா ஹைட்ராலிக் அமிலம் ஆகும். இது உச்சந்தலையை குளிர்வித்து இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. இது உங்கள் தலைமுடிக்கு வலுகொடுக்கிறது. 

திரிபலாப்பொடி, ஒரு சிறந்த ஹேர் மாஸ்க் ஆகும். ஏனெனில் இது மூன்று அற்புதமான மூலிகைகளின் நன்மையைக் கொண்டுள்ளது. இதில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்ற மூன்று உட்பொருட்கள் உள்ளது. 

மோரில் கலந்து இதை தடவும்போது அது பொடுகு மற்றும் சருமப் பிரச்னைகளைப் போக்குகிறது. சருமத்தில் அரிப்பு மற்றும் அலர்ஜியை குணப்படுத்துகிறது. சருமம் மற்றும் முடி பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது. 

தலைமுடி பிரச்னைகள் உள்ளவர்கள், தங்கள் உச்சந்தலையை சுத்தம் செய்யவும், முடி ஆரோக்கியத்தை பராமரிக்கவும் அல்லது மேம்படுத்தவும் இதைப் பயன்படுத்தலாம் என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. 

மோர் மற்றும் திரிபலா மாஸ்க் செய்முறை

500 மில்லி மோர் எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் திரிபலா சூர்ணத்தை சேர்க்கவேண்டும். அதை நன்றாக கலந்து இரவு முழுவதும் தலையில் ஊறுவிடவேண்டும். அடுத்த நாள் காலையில் தலையை மென்மையான ஷாம்பு கொண்டு அலசவேண்டும். 

பயன்படுத்தும் முறை 

பொடுகு உள்ளவர்கள் இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தவேண்டும். 

சருமத்தில் உள்ள வீக்கத்தைப் போக்க வாரத்தில் மூன்று முறை உபயோகிக்க வேண்டும். 

மோர் மற்றும் திரிபஹலா ஹேர் மாஸ்க்கின் நன்மைகள்?

திரிபலாவில் உள்ள ஒவ்வொரு மூலப்பொருளும் முடி பராமரிப்பு பண்புகளால் நிரம்பியுள்ளது.

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் வெப்பத்தை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது உங்கள் தலைமுடியை வலுப்படுத்த உதவுகிறது.

கடுக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை சிதைவதை தாமதப்படுத்துகிறது. முன்கூட்டிய நரைப்பதை தாமதப்படுத்துகிறது. 

தான்றிக்காய் வீக்கம், பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது இறுதியில் பொடுகைப் போக்குகிறது. தலையை சுத்தப்படுத்துகிறது. 

மோர் அதன் ஈரப்பதமூட்டும் பண்புகளுடன் உச்சந்தலை அரிப்பை குணப்படுத்துகிறது. 

மோரில் உள்ள புரோபயாடிக்குகள் இயற்கையான pH அளவை சமநிலைப்படுத்துவதன் மூலம் தலை முடியை ஆரோக்கியமாக பராமரிக்கிறது. இது பொடுகை எதிர்த்துப் போராடவும், அது மீண்டும் வருவதைத் தடுக்கவும் உதவுகிறது. 

உங்களுக்கு இது எரிச்சலைக் கொடுத்தால், இந்த சூப்பர் எளிதான மற்றும் பயனுள்ள முடி பராமரிப்பு தீர்வை முயற்சிக்கவும்.