திருநெல்வேலி சொதி : ஆப்பம் இடியாப்பத்துடன் அள்ளி அள்ளி சாப்பிடலாம்; திருநெல்வேலி சொதி குழம்பு! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  திருநெல்வேலி சொதி : ஆப்பம் இடியாப்பத்துடன் அள்ளி அள்ளி சாப்பிடலாம்; திருநெல்வேலி சொதி குழம்பு! இதோ ரெசிபி!

திருநெல்வேலி சொதி : ஆப்பம் இடியாப்பத்துடன் அள்ளி அள்ளி சாப்பிடலாம்; திருநெல்வேலி சொதி குழம்பு! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Updated Jun 22, 2025 09:42 AM IST

இதில் காய்கறிகள் சேர்ப்பதுடன், தேங்காய் பால் எடுத்து சேர்க்கிறோம். ஆனால் இரண்டும் கிட்டத்தட்ட நெருங்கிவரும் ஒன்றுதான். அவியலுடனும் இதை தொடர்புபடுத்தலாம். ஆனால் அவியலில் நாம் பாசிபருப்பு சேர்க்கமாட்டோம். இவை மூன்றும் சின்ன சின்ன மாற்றங்களைக்கொண்ட கிட்டத்தட்ட ஒரே மாதிரி செய்யப்படும் உணவுகள்தான்.

திருநெல்வேலி சொதி : ஆப்பம் இடியாப்பத்துடன் அள்ளி அள்ளி சாப்பிடலாம்; திருநெல்வேலி சொதி குழம்பு! இதோ ரெசிபி!
திருநெல்வேலி சொதி : ஆப்பம் இடியாப்பத்துடன் அள்ளி அள்ளி சாப்பிடலாம்; திருநெல்வேலி சொதி குழம்பு! இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

• தேங்காய் – 1

• பாசி பருப்பு – கைப்பிடியளவு

• கேரட் – 1

• பீன்ஸ் – 5

• பச்சை பட்டாணி – கைப்பிடியளவு

• உருளைக்கிழங்கு – 1

• முருங்கைக்காய் – 1

• இஞ்சி – கால் இன்ச்

• பச்சை மிளகாய் – 2

• சின்ன வெங்காயம் – 10

• பூண்டு – 10 பல்

• வர மிளகாய் – 2

• எலுமிச்சை பழச்சாறு – 2 ஸ்பூன்

• உளுந்து – ஒரு ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• சீரகம் – கால் ஸ்பூன்

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

செய்முறை

1. பாசிபருப்பை நன்றாக அலசிவிட்டு, குக்கரில் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

2. தேங்காயில் இரண்டு பால் எடுத்துவைத்துக்கொள்ளவேண்டும். மிக்ஸியில் ஒவ்வொரு முறை அரைக்கும்போதும், ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவேண்டும்.

3. அனைத்து காய்கறிகளையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவேண்டும். இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

4. ஒரு பாத்திரத்தில் பட்டாணி, நறுக்கிய காய்கறிகளை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைத்து இறக்கவேண்டும்.

5. கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், கடுகு, சீரகம், உளுந்து போட்டு தாளித்துக்கொள்ளவேண்டும். வரமிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அரைத்த இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

6. அடுத்து, காய்கறிகள், உப்பு மற்றும் வேகவைத்த பாசிபருப்பு சேர்த்து மசித்து அதனுடன் நன்றாக கலந்துவிடவேண்டும்.

7. பின்னர் இரண்டாம் தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி கொதிக்கவிடவேண்டும். நன்றாக கொதி வந்தவுடன் முதலாம் தேங்காய் பாலை அதில் சேர்த்து கொதிக்க விடக்கூடாது. சூடானவுடனே இறக்கிவிடவேண்டும். இறக்கியுவுடன் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துவிடவேண்டும்.

8. இதை ஆப்பம் மற்றும் இடியாப்பத்துடன் சேர்த்து பரிமாறினால் சுவை அள்ளும். சாதத்தோடு சேர்த்து இஞ்சி துவையலையும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.