'சாம்பாரே சாப்பிட்டு போர் அடிக்குதா.. புளிசேரியை இப்படி செய்து பாருங்க’: சர்க்கரவர் புளிசேரி செய்வது எப்படி? - டிப்ஸ்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  'சாம்பாரே சாப்பிட்டு போர் அடிக்குதா.. புளிசேரியை இப்படி செய்து பாருங்க’: சர்க்கரவர் புளிசேரி செய்வது எப்படி? - டிப்ஸ்!

'சாம்பாரே சாப்பிட்டு போர் அடிக்குதா.. புளிசேரியை இப்படி செய்து பாருங்க’: சர்க்கரவர் புளிசேரி செய்வது எப்படி? - டிப்ஸ்!

Marimuthu M HT Tamil Published May 10, 2025 02:29 PM IST
Marimuthu M HT Tamil
Published May 10, 2025 02:29 PM IST

'தேங்காய்த் துருவலுடன், பட்டை மிளகாயை நன்றாக அரைத்து, அந்த விழுதை, சர்க்கரை வள்ளிக்கிழங்கில் சேர்த்து ஒரு முறை கொதிக்க விட வேண்டும். இப்போது புளிசேரி தயார் ஆகத் தொடங்கும்’ சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து சர்க்கரவர் புளிசேரிசெய்வது எப்படி எனப் பார்ப்போம்.

'சாம்பாரே சாப்பிட்டு போர் அடிக்குதா.. புளிசேரியை இப்படி செய்து பாருங்க’: சர்க்கரவர் புளிசேரி செய்வது எப்படி? - டிப்ஸ்!
'சாம்பாரே சாப்பிட்டு போர் அடிக்குதா.. புளிசேரியை இப்படி செய்து பாருங்க’: சர்க்கரவர் புளிசேரி செய்வது எப்படி? - டிப்ஸ்!

சர்க்கரவர் புளிசேரி செய்யத்தேவையான பொருட்கள்:

சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 1 கப் (தோல் உரித்து துண்டுகளாக வெட்டியது),

புளி – சிறிய எலுமிச்சை அளவு,

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு,

தேங்காய் துருவல் – அரை கப்,

பட்டை மிளகாய் – இரண்டு,

கடுகு – 1 டீஸ்பூன்,

வெந்தயம் – கால் டீஸ்பூன்,

தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,

கறிவேப்பிலை – சிறிதளவு

சர்க்கரவர் புளிசேரி செய்முறை:

முதல் நிலையில், சர்க்கரை வள்ளிக்கிழங்கை எடுத்து நீர் ஊற்றி அலசி, சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அடுத்ததாக, கொதிக்க வைக்கும் அளவுக்கு தண்ணீரில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, அதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் போடவேண்டும்.

பின்னர், நன்கு வெந்து மிருதுவாகும் வரை சமைக்க வேண்டும். அதற்குள் புளியை தண்ணீரில் ஊறவைத்து புளித்தாரத்தை தயாரித்துவைத்துக்கொள்ள வேண்டும்.

பின்பு, புளித்தாரத்தைக் கொதிக்க வைத்து அதில் முன்பே தயார்செய்து வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கினை சேர்க்கவும். பின்னர், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சற்று சுருங்கும் வரை சமைக்கவும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை எப்போது சேர்க்கலாம்?:

மேலும், தேங்காய்த் துருவலுடன், பட்டை மிளகாயை நன்றாக அரைத்து, அந்த விழுதை, சர்க்கரை வள்ளிக்கிழங்கில் சேர்த்து ஒரு முறை கொதிக்க விட வேண்டும். இப்போது புளிசேரி தயார் ஆகத் தொடங்கும்.

அதன்பின்னர், தாளிக்க ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து புளிசேரியில் சேர்க்கவும்.

இதோ, இனிப்பு, புளிப்பு, சிறு காரம் கலந்து ஆனந்தமாகச் சாப்பிடும்படியான, சர்க்கரவர் புளிசேரி தயார். இதனை சாதம், சாம்பார் போன்றவற்றுடன் கலந்து சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும்.

தமிழ்நாடு ஸ்டைலில் சாம்பார் மற்றும் பிற குழம்புகள் ஊற்றிச் சாப்பிடும் நபர்களுக்கு, இந்த கேரள மக்கள் ருசித்து உண்ணும் சர்க்கரவர் புளிசேரியை உண்பது ஒரு தனி ருசியாக இருக்கும். முடிந்தால் முயற்சித்துப் பாருங்கள்.

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, சீஃப் கன்டென்ட் எடிட்டராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 11+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, சினிமா, ஜோதிடம், லைஃப்ஸ்டைல், தேசம்-உலகம், கிரிக்கெட் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிவகங்கையிலுள்ள பண்ணை பொறியியல் கல்லூரியில் எம்.இ- ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் மற்றும் தென்காசி - புளியங்குடியிலுள்ள எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரியில் பி.இ - சிவில் இன்ஜினியரிங்கும் படித்திருக்கிறார். விகடன், மின்னம்பலம்,காவேரி நியூஸ் டிவி, நியூஸ்ஜே டிவி, ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விகடனின் தலைசிறந்த மாணவப்பத்திரிகையாளர் 2014-15ஆக விருதுபெற்றவர். இவரது சொந்த ஊர் வடுகபட்டி, தேனி மாவட்டம் ஆகும்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.