Time Management : எங்கும் தாமதமாகச் செல்பவரா? இவற்றைப் பின்பற்றி நேரம் தவறாமையைக் கற்கவும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Time Management : எங்கும் தாமதமாகச் செல்பவரா? இவற்றைப் பின்பற்றி நேரம் தவறாமையைக் கற்கவும்!

Time Management : எங்கும் தாமதமாகச் செல்பவரா? இவற்றைப் பின்பற்றி நேரம் தவறாமையைக் கற்கவும்!

Priyadarshini R HT Tamil
Updated Jun 18, 2024 04:33 PM IST

Time Management : எங்கும் தாமதமாகச் செல்பவரா? இவற்றைப் பின்பற்றி நேரம் தவறாமையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

Time Management : எங்கும் தாமதமாகச் செல்பவரா? இவற்றைப் பின்பற்றி நேரம் தவறாமையைக் கற்கவும்!
Time Management : எங்கும் தாமதமாகச் செல்பவரா? இவற்றைப் பின்பற்றி நேரம் தவறாமையைக் கற்கவும்!

எனவே நீங்கள் நேரந்தவறாமையை கடைபிடிக்க சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில எளிய வழிகளைப் பின்பற்றி உங்கள் நேரத்தை முறையாகக் கையாளுங்கள். 2 நிமிட விதி என்ற ஒரு பிரபலமான வழியுடன் போமோடோரோ நுட்பம் வரை சில வழிகளை உங்கள் நேரத்தை மேலாண்மை செய்ய தருகிறோம்.

2 நிமிட நேர விதி

2 நிமிர நேர விதி என்பது, ஒரு சிறப்பான நேர மேலாண்மை முறையாகும். ஒரு விஷயத்தை நீங்கள் செய்ய 2 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரங்கள் தேவைப்படும் எனில், நீங்கள் 2 நிமிடத்திலே அந்த வேலையை செய்து முடித்துவிடவேண்டும். 

அதை பிறகு செய்துகொள்ளலாம் என்று வைதிருக்கக்கூடாது. இந்த  வழி உங்களுக்கு சிறிய விஷயங்களை எளிதில் செய்து முடித்துவிடவும், அவற்றை சேர்த்து வைத்துக்கொண்டிருக்காமல் இருக்கவும் உதவும். 

உங்கள் நேரத்தை சேமிக்கும். அதில் நீங்கள் முக்கிய வேலைகளை முடிக்கலாம். ஆனால், சிறிய விஷயங்கள் பிற்காலத்தில் உங்களின் கவனத்தை மாற்றாத வண்ணம் பார்த்துக்கொள்ள இது உதவுகிறது. ஒரு இமெயிலுக்கு நீங்கள் உடனடியாக பதிலளிக்கவேண்டுமெனில் உடனே செய்து முடித்துவிடுங்கள். அதை தள்ளிப்போடாதீர்கள்.

பொமோடோரோ டெக்னிக்

பொமோடோரோ டெக்னிக் என்பது ஃப்ரான்செஸ்கோ சிரிலோ என்பவரால் நிறுவப்பட்டது. இது நேர மேலாண்மைக்கு நன்மை தரும் ஒருமுறை. இது வேலையை பிரித்து செய்ய அனுமதிக்கிறது. 25 நிமிடங்களுக்கு ஒருமுறை இடைவேளை எடுத்துக்கொண்டு அந்த வேலையை செய்யவேண்டும். 25 நிமிடங்களுக்கு டைமர் வைத்துக்கொள்ளவேண்டும். 

இதனால் நீங்கள் செய்யும் வேலையில் முழுவதும் கவனம் செலுத்த முடியும். உங்களுக்கு எவ்வித இடையூறும் இருக்காது. ஒரு இடைவேளை முடிந்தவுடன், 5 நிமிடம் இடைவேளை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உங்களை வலுப்படுத்திக்கொள்ளுங்கள். நான்கு முறை 5 நிமிட இடைவேளை எடுங்கள். பின்னர் நீண்ட இடைவேளை எடுஙகள். இது நீங்கள் சிறப்பாக நேரத்தை மேலாண்மை செய்ய உதவும்.

நேரத்தை ட்ராக் செய்யும் ஆப்கள்

நீங்கள் நேரத்தை மேலாண்மை செய்ய எண்ணற்ற நேர ஆப்கள் தற்போது உள்ளன. அவை கிளாக்கிஃபை, ரெஸ்கியூ டைம் ஆகியவை உங்களுக்கு நாள் முழுவதும் நீங்கள் எவ்வாறு நேரத்தை செலவழிக்கிறீர்கள் என்பதை காட்டுகிறது. 

அது உங்களுக்கு உங்களின் நேரம் எப்படி வீணடிக்கப்படுகிறது என்று காட்டுகிறது. நீங்கள் நேரத்தை வீணடிக்கும் நடவடிக்கைகள் என்ன செய்கிறீர்கள் என்று காட்டுகிறது. உங்களுக்கு இடையூறு தருவது எது என்று காட்டுகிறது. இது உங்கள் நேரத்தை சரியாக மேலாண்மை செய்ய உதவுகிறது.

அனைவரையும் ஈடுபடுத்துவது

ஒரு தனிநபராக உங்களின் திறன்கள் எல்லைக்குட்பட்டவைதான். உங்களாலே அனைத்து வேலைகளையும் செய்ய முடியாது. உங்களுக்கு நேரம், அனுபவம், அறிவு, திறன் மற்றும் ஆற்றல் என அனைத்தும் அளவாகத்தான் இருக்கும். எனவே நீங்கள் நேரம் மற்றும் ஆற்றலை சிறப்பாக கையாள வேண்டுமெனில் வேலைகளை பகிர்ந்துகொடுப்பது நல்லது. 

ஆனால் நீங்கள் பகிர்ந்தளிக்கும் வேலைகளை திறமைசாலிகள் ஒப்படைக்கவேண்டும். இதன் மூலம் உங்களின் நேரத்தை சேமிக்க முடியும் மற்றும் நீங்கள் முக்கிய வேலைகளை பார்க்க முடியும். இது உங்கள் பொறுப்பு மற்றும் திறனை அதிகரிக்க உதவும்.

இல்லை சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்

உங்களின் எல்லைகள் மற்றும் உங்களின் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து உங்களின் இலக்குகளை முறைப்படுத்திக்கொள்ளுங்கள். அது மிகவும் அவசியம். அப்போதுதான், நீங்கள் தேவையற்ற, கூடுதல் மற்றும் முக்கியத்துவம் குறைந்த வேலைகளுக்கு இல்லை என்று சொல்ல முடியும். 

இதனால் நீங்கள் அதிகப்படியான வேலைகளால் சோர்ந்துவிடாமல் தடுக்க முடியும். இது உங்கள் நேரத்தை மதிக்க உதவும். உங்களின் ஆற்றலை சேமித்து, தேவையானவற்றுக்கு நேரம் செலவிட உதவும்.

ஜசன் ஹோவர் மேட்ரிக்ஸ்

ஜசன் ஹோவர் மேட்ரிக்ஸ் என்பது, உங்களின் வேலைகளை முக்கியத்துவம் மற்றும் அவசரம் குறித்து முன்னுரிமை கொடுப்பதற்கு உதவும். இது உங்கள் வேலைகளை 4 வகையாக பிரிக்கிறது. 

அவசரம் மற்றும் முக்கியமானது, முக்கியம் ஆனால் அவசரமல்ல, அவசரம் ஆனால் முக்கியமல்ல, முக்கியமும் அல்ல அவசரமும் அல்ல ஆனால் முடிக்கவேண்டியது. எனவே இதை பயன்படுத்தி எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என ஒருவர் முடிவெடுத்துக்கொள்ள முடியும். இதன் மூலமும் உங்கள் நேரத்தை மேலாண்மை செய்யமுடியும்.