‘நான் தேடும் செவ்வந்திப்பூ இது’ ஆமாம்! அதன் நன்மைகளை தெரிந்துகொண்டால் தேடித்தான் செல்வீர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ‘நான் தேடும் செவ்வந்திப்பூ இது’ ஆமாம்! அதன் நன்மைகளை தெரிந்துகொண்டால் தேடித்தான் செல்வீர்கள்!

‘நான் தேடும் செவ்வந்திப்பூ இது’ ஆமாம்! அதன் நன்மைகளை தெரிந்துகொண்டால் தேடித்தான் செல்வீர்கள்!

Priyadarshini R HT Tamil
Updated Oct 18, 2024 09:59 AM IST

செவ்வந்தி பூக்கள், பூஜைக்கு மட்டுமல்ல, உங்கள் உடலுக்கும் எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது செவ்வந்தி பூக்கள்.

‘நான் தேடும் செவ்வந்திப்பூ இது’ ஆமாம்! அதன் நன்மைகளை தெரிந்துகொண்டால் தேடித்தான் செல்வீர்கள்!
‘நான் தேடும் செவ்வந்திப்பூ இது’ ஆமாம்! அதன் நன்மைகளை தெரிந்துகொண்டால் தேடித்தான் செல்வீர்கள்!

செவ்வந்திப்பூக்களில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே, பீட்டா கரோட்டின், கால்சியம், நார்ச்சத்துக்கள், இரும்பு, மெக்னீசியம், நியாசின், பாஸ்பரஸ், ரிபோப்ளாவின், பொட்டாசியம், சோடியம், சிங்க், அமினோ அமிலங்கள் மற்றும் கிளைக்கோசைட்கள் ஆகியவை உள்ளன. இந்த உட்பொருட்கள் இந்த பூவில் இருந்து தயாரிக்கப்படும் தேநீருக்கு சுவையை மட்டும் கொடுக்கவில்லை. உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

செவ்வந்தி பூக்களில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்களுக்கு மிகவும் நல்லது. இதன் குணங்கள் உங்களுக்கு காய்ச்சல், சளி மற்றும் இருமல் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. உங்கள் நோய்களை ஆரம்பகட்டத்திலே குணமாக்குகிறது. தலைவலி மற்றும் உடலின் வெப்ப நிலை உயர்வதை தடுக்கிறது. இந்த பூவின் இயற்கை குளுமைத்திறன்கள் உங்களுக்கு காய்ச்சலால் ஏற்படும் உடலின் வெப்பநிலை உயர்வைத்தடுக்கிறது. இந்த டீயில் சிறிதளவு தேன் சேர்த்து பருகுவது உங்களுக்கு இதமளிக்கிறது. தொண்டை புண்களை குணப்படுத்துகிறது. பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது. இது நோய்களில் இருந்து விரைந்து குணமடைய உதவுகிறது. உங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்போது, நீங்கள் வைட்டமின் சி சத்துக்கள் உள்ள செவ்வந்திப்பூ தேநீர் பருகினால், அது உங்களுக்கு மூக்கடைப்பை நீக்கி, நுரையீரலை வலுப்படுத்தும். உங்கள் சைனஸ் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படும்போது அது பலனளிக்கிறது. உங்களுக்கு சளியை நீக்கி, நுரையீரலை அமைதிப்படுத்துகிறது. இந்த டீ அலர்ஜியைப் போக்குகிறது.

தூய்மைப்படுத்தும் மற்றும் சுத்தப்படுத்தும் திறன்

இதன் குளுமைத்திறன் காய்ச்சலை மட்டும் குணப்படுத்தாது. சன் ஸ்ட்ரோக்கால் அவதிப்படும்போது உங்கள் உடலின் உள்ளே வெப்பநிலை சமமின்மையை போக்க உதவும். வயோதிக்கத்தால், உடலில் வெப்பநிலை உயரும், மொனோபாஸ் காலங்களில் பெண்களின் உடலில் ஏற்படும் சூடு மிகவும் கொடுமையாதாக இருக்கும். இந்த பானம் இயற்கையில் உடல் சூட்டத்தணித்து உடலுக்கு பாதுகாப்பைக் கொடுக்கிறது. எனவே கோடைக்காலங்களில் செவ்வந்தி பூக்கள் தேநீரை பருகுவது நல்லது. இது உங்கள் உடலை குளுமைப்படுத்துவதுடன், உங்களின் செரிமானத்துக்கும் சிறந்தது.

இதயத்துக்கு அமிர்தம்

இதன் குளுமைத்தன்மை இதயத்தின் கோளாறுகளை தடுக்க உதவுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. அடைப்பு உள்ள தமனிகளை குணப்படுத்துகிறது. வெரிக்கோஸ் நரம்புகளை சரிசெய்கிறது. தலைவலி மற்றும் மயக்கம் போன்ற உயர் ரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய அறிகுறிகளையும் போக்குகிறது. இந்த டீயை தினமும் பருகுவது உங்களின் நெஞ்சுவலியைப் போக்குகிறது. உங்கள் இதய பிரச்னைகளைத் தீர்க்க மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இந்த தேநீரை எடுத்துக்கொள்ளலாம். இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது. இதனால் இதய நோய்கள் தடுக்கப்படுகிறது.

கழிவுநீக்கம்

செவ்வந்திபூக்களின் தேநீரைப் பருகுவது உங்கள் கல்லீரலில் உள்ள கழிவுகளைப் போக்க உதவுகிறது. உங்கள் கல்லீரலின் இயக்கத்தை அதிகரிப்பதன் மூலம் உங்கள் உடலில் உள்ள கழிவுகள் நன்முறையில் வெளியேற உதவுகிறீர்கள். இந்த டீ கல்லீரலைக் காக்கிறது. இந்த டீ, ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் உள்ளுறுப்புக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது நரம்பியல் கோளாறுகளை சரிசெய்கிறது. மனமாற்றத்தை தடுக்கிறது. இந்த டீயால் சிறுநீரகமும் பயனடைகிறது. இது உடலில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுக்களை அகற்றுகிறது. தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது. இந்த தேநீரை பருகும்போது அது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களுக்கு எதிரான குணங்கள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கச் செய்கிறது. உங்களை நோய்களில் இருந்து விரைந்து காப்பாற்ற உதவுகிறது. இதை பருகிவரும்போது உங்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்படாமலும் தடுக்கிறது.

குடல் ஆரோக்கியம்

செவ்வந்திப்பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரை நீங்கள் ஒரு நாளில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பருகலாம். நன்றாக சாப்பிட்டபின் இந்த தேநீரை பருகுவதால் உங்களுக்கு செரிமானம் சிறப்பாக நடைபெறுகிறது. உங்கள் குடலில் உள்ள கொழுப்பை கரைக்க இந்த டீ உதவுகிறது. அனைவரும் செரிமான பிரச்னைகளால் அவ்வப்போது அல்லல்படுபவர்கள்தான். இந்த செவ்வந்திப்பூ தேநீர், உங்களுக்கு வயிற்று வலி, சேரர்வு, மயக்கம் போன்வற்றை தவிர்க்க உதவுகிறது. உங்கள் வயிற்றை நன்முறையில் மீண்டும் இயக்க உதவுகிறது. இந்த மூலிகை தேநீர் உங்களுக்கு செரிமானத்துக்கு உதவுகிறது. இதில் இனிப்பு சேர்க்காமல் பருகும்போது அது உங்களுக்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் பி, உடல் கொழுப்பை விரைந்து கரைக்க உதவுகிறது.

கண் பார்வைத் திறனை அதிகரிக்கிறது

செவ்வந்திப்பூக்கள் தேநீர் உங்களுக்கு கண் பார்வைத்திறனை அதிகரிக்க உதவுகிறது. கண் தொடர்பான பல்வேறு பிரச்னைகளில் இருந்து காக்கிறது. இது உங்கள் பார்வைத்திறனை அதிகரிக்கும். கண் தொடர்பான பிரச்னைகளை குணப்படுத்தும். குறிப்பாக நீண்ட நேரம் கம்ப்யூட்டர் திரையில் பணிபுரிபவர்களுக்கு கண் பார்வைத்திறன் கோளாறுகள் ஏற்படும். இது அவர்களுக்கு மிகவும் நல்லது. நீங்கள் கடும் சோர்வாக இருக்கும்போது இந்த தேநீரை பருகினால், உங்கள் பார்வை மங்குவதை தடுத்து, உங்கள் கண்களின் சோர்வை நீக்குகிறது. நீங்கள் ஒரு மூடிய அறையில் நாள் முழுவதும் பணி செய்வது உங்கள் கண்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துகிறது. உங்கள் கண்கணில் தூசி விழுந்து வலி, எரிச்சல் மற்றும் கண்களில் தண்ணீர் கசிவது, உங்கள் கண்களில் உள்ள தூசியை அடித்து வெளியேற்ற கண் முயற்சி செய்யும் எதிர்ப்பு வேலையாகும். எனவே உங்கள் கண்களில் தூசி விழுந்தால், ஒரு பருத்தி துணியில் இந்த டீயை மூழ்கவைத்து கண்களை சுத்தம் செய்தால் உங்கள் கண்களுக்கு அமைதிகிட்டும்.

நீரிழிவு நோய்

செவ்வந்தி பூ தேநீர் ரத்த சர்க்கரை அளவைக் குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்ழுடுத்துகிறது.

உடலை அமைதிப்படுத்துகிறது

இந்த மூலிகை டீயில் உள்ள அமைதிப்படுத்தும் திறன், உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. உங்கள் நரம்புகளுகு இதமளித்து, உங்களை அமைதிப்படுத்துகிறது. உங்கள் மனதை தெளிவாக்குகிறது. தலைவலியைப் போக்கி, உங்களின் டென்சனைக் குறைக்கிறது. மயக்கம், உறக்கமின்மை ஆகியவற்றுக்கு நிவாரணம் தருகிறது. உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. உங்கள் உடலின் ஆற்றல் அளவை நாள் முழுவதும் காக்கிறது. உங்கள் மூளைக்கு புத்துணர்ச்சி தருகிறது. மனஅழுத்தத்தைப் போக்குகிறது. உங்களின் நினைவாற்றலை அதிகரிக்கிறது. சோர்வு மற்றும் நரம்பு மண்டல கோளாறுகளை சரிசெய்கிறது. வலிக்கு இதமாகிறது. ஒற்றைத்தலைவலி மற்றும் தலைவலியைப் போக்குகிறது. பல் வலி மற்றும் ஈறுகளில் உள்ள பிரச்னைகளைப் போக்குகிறது.

புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது

இதில் உள்ள ஃப்ளாவனாய்ட்கள், புற்றுநோயைத் தடுக்க உதவும். இவை கட்டிகள் உருவாகாமல் தடுக்கிறது. டிஎன்ஏ உருமாற்றத்தை தடுக்கிறது. சேதத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள ஃபேட்டி ஆசிட்கள், உங்கள் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கிறது.

முகச்சுருக்கம்

சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் திறன்கள் இந்த தேநீரில் உள்ளது. இந்த தேநீரை பருகும்போது, அது உங்கள் உடலை ஆரோக்கியமுடனும், உங்களுக்கு இளமை தோற்றத்தையும் தருகிறது. இளம் வயதிலேயே வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது. காற்று மற்றும் வெப்பத்தால் சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்குகிறது. உங்கள் சருமத்தில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. உங்களுக்கு மனஅழுத்தத்தால் ஏற்படும் முகப்பருக்கள் மற்றும் வயோதிகம் ஆகியவற்றை தடுக்க உதவுகிறது. உங்கள் உடலில் ஹார்மோன்கள் சமமாக சுரக்க உதவுகிறது. இதை உங்கள் சருமத்தில் பூசும்போது அது உங்களுக்கு காயம், முகப்பருக்கள், வெடிப்புகள் மற்றும் கொப்புளங்களை அகற்ற உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உங்கள் சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்குகிறது. வயோதிகத்தின் அறிகுறிகளைப் போக்குகிறது. தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது. சருமத்தில் உள்ள எரிச்சலைப் போக்குகிறது.