‘நான் தேடும் செவ்வந்திப்பூ இது’ ஆமாம்! அதன் நன்மைகளை தெரிந்துகொண்டால் தேடித்தான் செல்வீர்கள்!
செவ்வந்தி பூக்கள், பூஜைக்கு மட்டுமல்ல, உங்கள் உடலுக்கும் எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது செவ்வந்தி பூக்கள்.

செவ்வந்தி பூக்கள் பெரும்பாலும் பூஜைக்கு பயன்படுத்தப்படுபவை. இந்த பூக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆசியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சீன பாரம்பரிய மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சுவையானது, அதனால், நல்ல பானம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த தாவரம் 15வது நூற்றாண்டில் சீனாவில் பயிரிடப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது நேர்மை மற்றும் உண்மையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. செவ்வந்தி பூக்களில் இருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது. இது சுவாசக் கோளாறுகள், ரத்த அழுத்தம் மற்றும் நரம்புகளை இதமாக்குகிறது. சீனா, கொரியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இந்த தேநீரை லட்சக்கணக்கிலான மக்கள் பருகுகிறார்கள். இது அனைவரும் விரும்பும் கோடை கால பானமாக உள்ளது. இதன் உடலை குளுமைப்டுத்தும் திறன் மற்றும் பாரம்பரிய ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. இந்தப்பூக்களை வேகவைத்து சாலட்களிலும் பயன்படுத்தலாம். இதன் இலைகளையும் உட்கொள்ளலாம்.
செவ்வந்திப்பூக்களில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே, பீட்டா கரோட்டின், கால்சியம், நார்ச்சத்துக்கள், இரும்பு, மெக்னீசியம், நியாசின், பாஸ்பரஸ், ரிபோப்ளாவின், பொட்டாசியம், சோடியம், சிங்க், அமினோ அமிலங்கள் மற்றும் கிளைக்கோசைட்கள் ஆகியவை உள்ளன. இந்த உட்பொருட்கள் இந்த பூவில் இருந்து தயாரிக்கப்படும் தேநீருக்கு சுவையை மட்டும் கொடுக்கவில்லை. உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது
செவ்வந்தி பூக்களில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்களுக்கு மிகவும் நல்லது. இதன் குணங்கள் உங்களுக்கு காய்ச்சல், சளி மற்றும் இருமல் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. உங்கள் நோய்களை ஆரம்பகட்டத்திலே குணமாக்குகிறது. தலைவலி மற்றும் உடலின் வெப்ப நிலை உயர்வதை தடுக்கிறது. இந்த பூவின் இயற்கை குளுமைத்திறன்கள் உங்களுக்கு காய்ச்சலால் ஏற்படும் உடலின் வெப்பநிலை உயர்வைத்தடுக்கிறது. இந்த டீயில் சிறிதளவு தேன் சேர்த்து பருகுவது உங்களுக்கு இதமளிக்கிறது. தொண்டை புண்களை குணப்படுத்துகிறது. பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது. இது நோய்களில் இருந்து விரைந்து குணமடைய உதவுகிறது. உங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்போது, நீங்கள் வைட்டமின் சி சத்துக்கள் உள்ள செவ்வந்திப்பூ தேநீர் பருகினால், அது உங்களுக்கு மூக்கடைப்பை நீக்கி, நுரையீரலை வலுப்படுத்தும். உங்கள் சைனஸ் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படும்போது அது பலனளிக்கிறது. உங்களுக்கு சளியை நீக்கி, நுரையீரலை அமைதிப்படுத்துகிறது. இந்த டீ அலர்ஜியைப் போக்குகிறது.