வேறு வழியில்லை; இதைத்தான் செய்யணும்; நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு; காத்துக்கொள்ள டிப்ஸ்கள்!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு, அதில் இருந்து உங்களை காத்துக்கொள்ள வேறு வழியில்லை நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பின்பற்றித்தான் ஆகவேண்டும்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், தொழிற்சாலைகள் என அவற்றின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் நீங்கள் சுகாதாரமற்ற காற்றை சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் உங்களுக்கு எண்ணற்ற நோய்கள் ஏற்படுகிறது. காற்றின் மாசுபாடுகளில் இருந்து உங்களை காத்துக்கொள்ளும் வழிமுறைகளை தெரிந்துகொள்ளுங்கள். ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வது எப்படி என்றும் கற்றுக்கொள்ளுங்கள். நமது நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் மாசு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு எண்ணற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. தீபாவளி முடிந்து அடுத்த நாள் டெல்லியில் காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. நச்சுப்புனை டெல்லி முழுவதையும் சுற்றி சூழ்ந்திருந்தது. டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது என்றும், காற்று மாசைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றும் மீண்டும், மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அங்கு நாளுக்கு நாள் அதிகரிக்கு காற்று மாசில் இருந்து உங்களை காத்துக்கொள்ள நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.
வீடுகளின் உள்ளே இருப்பது
காலையில், மாலையில் காற்றின் மாசு அதிகரித்து காணப்படும். இதனால் அந்த வேளைகளில் வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும். அந்த நேரத்தில் வீட்டுக்குள்ளே இருந்து கொள்ளுங்கள். நல்ல காற்றோட்டமான இடத்தில் இருந்து கொள்ளுங்கள். சுத்திகரிக்கப்பட்ட காற்று உள்ள இடத்தை தேர்வு செய்து அங்கு அமர்ந்து கொள்ளுங்கள். இதனால் நீங்கள் காற்று மாசில் இருந்து சிறிதளவு தப்பிக்க முடியும்.
ஏர் ப்யூரிஃபையர்கள்
நல்ல தராமான காற்று ப்யூரிஃபையர்களை வாங்கி வீடுகளில் வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக படுக்கை அறை, ஹார் என அனைத்து இடங்களிலும் நல்ல காற்று வடிப்பான்கள் இருக்கட்டும். நல்ல தரமான வடிப்பான்கள் காற்றில் உள்ள மாசு துகள்களை வடித்துவிட்டு, உங்களுக்கு சுவாசிக்க நல்ல காற்றைத் தரும். இதனால் உங்கள் வீடுகளுக்குள் மாசு இருக்காது.