அவசரத்துக்கு பக்கத்து வீடுகளில் கேட்கத் தேவையில்லை; மாறாக கொடுக்கலாம்! இஞ்சியை வீட்டில் வளர்ப்பது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அவசரத்துக்கு பக்கத்து வீடுகளில் கேட்கத் தேவையில்லை; மாறாக கொடுக்கலாம்! இஞ்சியை வீட்டில் வளர்ப்பது எப்படி?

அவசரத்துக்கு பக்கத்து வீடுகளில் கேட்கத் தேவையில்லை; மாறாக கொடுக்கலாம்! இஞ்சியை வீட்டில் வளர்ப்பது எப்படி?

Priyadarshini R HT Tamil
Published Oct 14, 2024 07:00 AM IST

அவசரத்துக்கு பக்கத்து வீடுகளில் கேட்கத் தேவையில்லை, மாறாக அவர்களுக்கு புதிதாக பறித்துக்கொடுக்கலாம். இஞ்சியை வீட்டில் வளர்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அவசரத்துக்கு பக்கத்து வீடுகளில் கேட்கத் தேவையில்லை; மாறாக கொடுக்கலாம்! இஞ்சியை வீட்டில் வளர்ப்பது எப்படி?
அவசரத்துக்கு பக்கத்து வீடுகளில் கேட்கத் தேவையில்லை; மாறாக கொடுக்கலாம்! இஞ்சியை வீட்டில் வளர்ப்பது எப்படி?

வீட்டில் இஞ்சி வளர்ப்பது எப்படி?

இஞ்சியை அதன் வேறுடன் கடைகளில் வாங்கிக்கொள்ளவேண்டும். அந்த வேர்களை நன்றாக உற்றுப்பாருங்கள். தண்டு பிடித்து வளர ஏற்றதா என்பதை உறுதிப்படுத்திக்காண்டு, ஒரு டிரேயில், ஆர்கானிக் உரம் கலந்த மண்ணை நிரப்பி இஞ்சியை முழுமையாக அதற்குள் புதைத்து வெப்பமான இடத்தில் 6 வாரங்களுக்கு வைக்கவேண்டும். அது வளர்ந்து வரத்துவங்கும்போது, மற்றொரு தொட்டிக்கு மாற்றவேண்டும். அதன் மீது இயற்கை உரங்கள் தூவி, தண்ணீர் தெளிக்க வேண்டும். இதை சில காலம் கழித்து நீங்கள் அறுவடை செய்துகொள்ளலாம்.

இஞ்சியை எங்கு வளர்க்கவேண்டும்?

வெப்பமான எந்த இடத்தில் வேண்டுமானாலும் இஞ்சியை வளர்க்கலாம். பனியில்லாத இடத்தில் வளர்க்கலாம். பசுமைக்குடில் அமைத்தும் வளர்க்கலாம்.

எப்படி விதைப்பது?

முழு இஞ்சி அல்லது சிறிய துண்டுகளாக நறுக்கி மண்ணில் புதைத்து வைத்துவிடலாம். அதற்கு வெளியே முளைத்துவர கண் பகுதிகள் மட்டும் இருக்கவேண்டும். இஞ்சியை வெட்டி விதைத்தால், வெட்டி இரண்டு நாட்களுக்கு வெளியில் வைத்துவிடவேண்டும். அடுத்து ஒரு ட்ரேயில் மண், உரம் என நிறைத்து, அதில் இஞ்சியை புதைக்கவேண்டும். முளைத்துவர ஏதுவாக கண் போன்ற பகுதி மேலே தெரியவேண்டும். இஞ்சியின் வேர்களை மண்ணுக்குள் புதைத்துவிடவேண்டும்.

வெப்பம் அதிகம் உள்ள இடத்தில் கொஞ்சம் மட்டும் நிழலில் வைத்து, தண்ணீரை அவ்வப்போது மண் ஈரமாகும் அளவுக்கு தெளித்து வளர்க்கவேண்டும். சில வாரங்களில் வேர்விடும். அப்போது வேறு தொட்டிக்கு மாற்றிவிடவேண்டும். 5 செமீ மூடிவிடவேண்டும். தண்டுகள் வெளியில் தெரியவேண்டும். தண்ணீர் ஊற்றும்போது கவனம் தேவை. அதை சிறிது காயவிடவும் வேண்டும்.

இஞ்சியை பாதுகாத்து வளர்ப்பது எப்படி?

உங்கள் இஞ்சிச் செடி வளர வளர, அதை வெப்பமான இடத்தில் வைக்கவேண்டும். அது பகுதியளவு நிழலில் இருக்கவேண்டும். அதற்கு தண்ணீர் ஊற்றுவதை வழக்கமாக்கிக்கொள்ளவேண்டும். உரமிடும்போது ஈரப்பதம் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். தண்டு விட்டவுட்ன் கூடுதல் உரமிடவேண்டும். குளிர் காற்று படக்கூடாது. குளிர் அதிகரித்தால் வீட்டுக்குள் வைத்து வளர்க்கவேண்டும்.

அறுவடை எப்போது?

கோடைக்காலத்தின் பிற்பகுதியில் இஞ்சி இலைகள் விடுவதை நிறுத்தும், அதன் பின்னர் எப்போது வேண்டுமானாலும் அறுவடை செய்யலாம். மண்ணில் இருந்து அகற்றவேண்டும். நன்றாக கழுவி, தோல் சீவி சாப்பிடவேண்டும்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ரெசிபிக்கள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்களை தேர்ந்தெடுத்து லைஃப்ஸ்டையில் பகுதியில் உங்களுக்காக ஹெச்.டி தமிழ் சிறப்பான முறையில் வழங்கி வருகிறது. எனவே தொடர்ந்து இதுபோன்ற எண்ணற்ற தகவல்களைப் பெற எங்கள் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.