குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் – வரமா? சாபமா? – சுற்றுச்சுசூல் நிபுணர் அலசல்!
மேலும், சூழல் சீர்கேடு காரணமாக, டெல்லியில் வாழும் மக்களின் வாழ்நாள் 12 வருடம் குறைந்ததாக ஆய்வுகள் உறுதிபடுத்தின. சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் டைஆக்சின் (Dioxin), புரான் (Furan) அளவு 9 மடங்கு அதிகமாக இருந்தது.

குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் – வரமா? சாபமா? - தரவுகள், கள உண்மைகள் சாபமே என உறுதிபடுத்தினாலும், தமிழக அரசு பொதுமக்கள், வார்டு கவுன்சிலர்கள், சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பை மீறி கொடுங்கையூரில் குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டத்தை - Waste To Energy (WTE) அமல்படுத்த இருப்பது, ஏற்கனவே உள்ள சுகாதார பாதிப்பை மேலும் மோசமாக்கும் என்பதால் அத்திட்டத்தை கைவிட வேண்டும்.
குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் வெளித்தோற்றத்திற்கு கவர்ச்சிகரமாகத் தெரிந்தாலும், உண்மையில் சூழல் சீர்கேட்டை அதிகமாக்கி, மக்களுக்கு நோய் பாதிப்பை அதிகப்படுத்துவதே கள உண்மை என்பதால் கொடுங்கையூரில் குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
ஏப்ரல் 2025ம் தேதி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அளித்த தகவலில் இந்தியாவில் தற்போது 21 குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் அமைப்புகள் இயங்கி வருவதாகவும், இன்னமும் புதிதாக 556 திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் செய்திகள் உள்ளது.