துணை சுகாதார மையங்களின் பரிதாப நிலை – கிராம மக்களுக்கு அரசு செய்ய வேண்டியது என்ன?
தமிழக மற்றும் இந்திய கிராமப்புறங்களில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு அடிப்படை சுகாதாரத்தை வழங்க வேண்டிய கடமை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உள்ளது.

துணை சுகாதார மையங்களின் பரிதாப நிலை – கிராம மக்களுக்கு அரசு செய்யு வேண்டியது என்ன?
கிராமப்புற மக்களுக்கு மிக அருகில் அமைந்து, அவர்களின் சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்வதில் துணை சுகாதார மையங்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது.
இந்நிலையில், மிகச் சமீபத்தில் Indian Journal of Medical Research (IJMR) வெளிவந்த ஆய்வுக் கட்டுரையில், முதற்கட்ட இலவச சிகிச்சை மையமாகத் திகழும் துணை சுகாதார மையங்களின் பரிதாப நிலை வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், உலக சுகாதார மையமும் இணைந்து 7 மாநிலங்களில், 19 மாவட்டங்களில், 105 துணை சுகாதார மையங்களில் மேற்கொண்ட ஆய்வில், தமிழகத்தில் அல்லது இந்தியாவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் தொற்றா நோய்களான ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் சிகிச்சையில் பெரும் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.