செவ்வாழை இனிப்பு அம்மிணி கொழுக்கட்டை; குழந்தைகள் விரும்பும் ஈவ்னிங் ஸ்னாக்ஸ்! இதோ ரெசிபி!
செவ்வாழை, ராகி, இனிப்பு, அம்மணி கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பாருங்கள்.
கொழுக்கட்டை என்றால் அரிசி மாவை வைத்துதான் பொதுவாக செய்வோம். ஆனால் செவ்வாழைப் பழத்தைப் பயன்படுத்தியும் கொழுக்கட்டை செய்ய முடியும். அதை செய்வதும் எளிது. இது சுவையானதாகவும் இருக்கும். இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனாலேயே நீங்கள் இந்த ரெசிபியை கட்டாயம் செய்து சாப்பிடுங்கள். செவ்வாழைப்பழம் எண்ணற்ற நன்மைகள் நிறைந்தது ஆகும். இந்த கொழுக்கட்டை செய்து சாப்பிடும்போது அந்தப்பழத்தின் நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும். இதில் ராகி மாவும் சேர்க்கப்படுவதால், இதன் ஆரோக்கிய நன்மைகள் மேலும் அதிகரிக்கும். இதோ செவ்வாழை, இனிப்பு, ராகி அம்மணி கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
செவ்வாழைப்பழம் – 2
நாட்டுச்சர்க்கரை – 2 ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
பால் – கால் ஸ்பூன்
அரிசி – 2 கப்
ராகி மாவு – ஒரு கப்
தாளிக்க தேவையான பொருட்கள்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
முந்திரி – 10
திராட்சை – 10
சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் பழுத்த வாழைப்பழம், பால், உப்பு மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து மையாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். நாட்டுச்சர்க்கரை அதிகம் கூட சேர்த்துக்கொள்ளலாம்.
அரைத்த கலவையுடன், அரிசி மாவு மற்றும் ராகி மாவு சேர்த்து நன்றாக கொழுக்கட்டை மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவேண்டும். இதற்கு தண்ணீர் சேர்க்கும்போது கவனமாக இருக்கவேண்டும். அது மிகவும் முக்கியமானது.
நல்ல கெட்டியாக பிசைந்த் மாவுகளில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவேண்டும். இந்த உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவேண்டும். வெந்த கொழுக்கட்டைகளை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் நெய் சேர்த்து அது சூடானவுடன் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து வறுக்கவேண்டும். அடுத்து தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி சர்க்கரையை தூவிக்கொள்ளவேண்டும். சர்க்கரை உங்களுக்கு தேவையான அளவை அதிகம் அல்லது குறைத்துக்கொள்ளலாம்.
இதை அடுப்பில் வைக்கும்போது தூவக்கூடாது. அப்படி தூவினால் கரைந்துவிடும். இறக்கியவுடன் அந்த சூட்டிலே கரைந்து சுவை நன்றாக இருக்கும். அதில் வேக வைத்து, ஆறவைத்துள்ள கொழுக்கட்டைகளை சேர்த்துவிடவேண்டும். அனைத்தையும் பிரட்டினால், சூப்பர் சுவையான செவ்வாழை, இனிப்பு, அம்மணி கொழுக்கட்டை தயார்.
இது ஒரு சிறந்த மாலை நேர ஸ்னாக்ஸ் ஆகும். இதை பண்டிகை காலங்களில் கடவுளுக்கு நைவேத்யமாகவும் படைக்கலாம். பள்ளிவிட்டு வரும் குழந்தைகளுக்கு இதை செய்துகொடுத்தால் அவர்கள் குதூகலமாவார்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் நீங்களும் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள்.
மேலும் செவ்வாழைப்பழம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரக்கூடிய பழம் ஆகும். அதை சில குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பார்கள். அவர்களுக்கு செய்துகொடுக்கும்போது, அவர்களுக்கு அந்த பழத்தின் நன்மைகளும் கிடைத்துவிடும். எனவே கட்டாயம் செய்து சாப்பட்டு மகிழுங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்