Near to Airport: விமான நிலையத்திற்கு அருகில் இருக்கிறீர்களா? இதய நோய் வரலாம்! புதிய ஆய்வில் தகவல்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Near To Airport: விமான நிலையத்திற்கு அருகில் இருக்கிறீர்களா? இதய நோய் வரலாம்! புதிய ஆய்வில் தகவல்!

Near to Airport: விமான நிலையத்திற்கு அருகில் இருக்கிறீர்களா? இதய நோய் வரலாம்! புதிய ஆய்வில் தகவல்!

Suguna Devi P HT Tamil
Jan 28, 2025 04:39 PM IST

Near to Airport: லண்டனில் உள்ள ஹீத்ரோ, கேட்விக், பர்மிங்காம் மற்றும் மான்செஸ்டர் விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்பவர்களின் இதய அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் 10 முதல் 20 சதவீதம் வரை குறைபாடு உள்ளதாக அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Near to Airport: விமான நிலையத்திற்கு அருகில் இருக்கிறீர்களா? இதய நோய் வரலாம்! புதிய ஆய்வில் தகவல்!
Near to Airport: விமான நிலையத்திற்கு அருகில் இருக்கிறீர்களா? இதய நோய் வரலாம்! புதிய ஆய்வில் தகவல்!

லண்டனில் உள்ள ஹீத்ரோ, கேட்விக், பர்மிங்காம் மற்றும் மான்செஸ்டர் விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்பவர்களின் இதய அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் 10 முதல் 20 சதவீதம் வரை குறைபாடு உள்ளதாக அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. லண்டன் யுனிவர்சிட்டி காலேஜில் உள்ள கார்டியோவாஸ்குலர் சயின்ஸ் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. விமானத்தின் உரத்த சத்தங்களைத் தொடர்ந்து வெளிப்படுத்துவது இதயத் தசைகள் தடிமனாவதற்கு வழிவகுக்கும் என்று இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றங்களால், இரத்தத்தை பம்ப் செய்யும் இதயத்தின் திறன் குறைகிறது. இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

ஆய்வு 

 இங்கிலாந்தில் உள்ள முக்கிய விமான நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் 3,600 பேரின் தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் UK Biobank இலிருந்து சேகரித்தனர். அவர்களின் இதயத்தின் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இது UK சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் வழங்கப்பட்ட விமான இரைச்சல் மதிப்பீடுகளுடன் ஒப்பிடப்பட்டது. பகலில் 50 டெசிபலுக்கும், இரவில் 45 டெசிபலுக்கும் அதிகமான சத்தத்தாய் கேட்பவர்களுக்கு இதயத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது பகலில் 45 டெசிபல் மற்றும் இரவில் 40 டெசிபல் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த வரம்பை விட அதிகமாக உள்ளது.

உரத்த விமான சத்தங்களுக்கு ஆளானவர்களில் 7 சதவீதம் பேர் இதய நிறை  மற்றும் 4 சதவீதம் பேர் இதய சுவர் தடிமன் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர் எனத் தெரியவந்துள்ளது.  ஆராய்ச்சியாளர்கள் இந்த கண்டுபிடிப்புகளை 21,400 பேரின் இதயங்களின் எம்ஆர்ஐ ஸ்கேன்களுடன் ஒப்பிட்டனர். இதிலிருந்து, விமானத்தின் சத்தம் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இரவில் விமானம் சத்தம் கேட்பது உடல் நலத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் இது தூக்கத்தையும் பாதிக்கிறது.

ஒலி மாசுபாடு

ஒலி மாசுபாடு  உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இது கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனையும் உற்பத்தி செய்கிறது, இது பசியின்மை மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். கடுமையான ஒலி மாசுபாடு மாரடைப்புக்கு வழிவகுக்கும் என்பது குறித்து கூடுதல் ஆய்வுகள் இன்று வரை வெளியாகவில்லை. 

விமானத்தின் இரைச்சலின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைத் தவிர்க்க வல்லுநர்கள் சில வழிகளைப் பரிந்துரைக்கின்றனர். சவுண்ட் ப்ரூஃப் ஜன்னல்களை நிறுவி, சத்தத்தை நீக்கும் சாதனங்களைப் பயன்படுத்தவும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் இந்த நோய்களின் அபாயத்தை குறைக்கலாம். 

விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் தங்கள் இதய ஆரோக்கியத்தை தவறாமல் பரிசோதித்து, சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும். நீங்கள் சோர்வு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அல்லது சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், மருத்துவ உதவியை நாடுங்கள். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.