பன்னீர் பாப்கார்ன் : பன்னீர் பாப்கார்ன்; குழந்தைகள்கிட்ட கொடுத்தா போதும்! துளி கூட மிச்சம் வைக்க மாட்டார்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பன்னீர் பாப்கார்ன் : பன்னீர் பாப்கார்ன்; குழந்தைகள்கிட்ட கொடுத்தா போதும்! துளி கூட மிச்சம் வைக்க மாட்டார்கள்!

பன்னீர் பாப்கார்ன் : பன்னீர் பாப்கார்ன்; குழந்தைகள்கிட்ட கொடுத்தா போதும்! துளி கூட மிச்சம் வைக்க மாட்டார்கள்!

Priyadarshini R HT Tamil
Published Mar 29, 2025 04:16 PM IST

பன்னீர் பாப்கார்ன் : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது எண்ணெயில் பொரித்து செய்யப்படும் ஸ்னாக்ஸ் என்பதால், இது மொறு மொறுப்பாகவும், வித்யாசமான சுவையிலும் அசத்தலாக இருக்கும். இதற்கு கோட் செய்யப்படும் கார்ன் ப்ளேக்ஸ் இதற்கு சூப்பர் சுவையைத் தரும்.

பன்னீர் பாப்கார்ன் : பன்னீர் பாப்கார்ன்; குழந்தைகள்கிட்ட கொடுத்தா போதும்! துளி கூட மிச்சம் வைக்க மாட்டார்கள்!
பன்னீர் பாப்கார்ன் : பன்னீர் பாப்கார்ன்; குழந்தைகள்கிட்ட கொடுத்தா போதும்! துளி கூட மிச்சம் வைக்க மாட்டார்கள்!

தேவையான பொருட்கள்

• பன்னீர் – 200 கிராம்

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

• எலுமிச்சை பழச்சாறு – ஒரு ஸ்பூன்

• கோதுமை மாவு – 2 ஸ்பூன்

• மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• கார்ன் ப்ளேக்ஸ் – ஒரு கப்

• எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

1. பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும். அதில் உப்புத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், இஞ்சி-பூண்டு விழுது, எலுமிச்சை பழத்தின் சாறு என அனைத்தும் சேர்த்து நன்றாக பன்னீரின் அனைத்து இடங்களிலும் ஒட்டுமாறு செய்து 20 நிமிடங்கள் மேரியனேட் செய்து வைத்துவிடவேண்டும்.

2. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து கரைத்துக்கொள்ளவேண்டும். ஒரு தட்டில் கார்ன் ப்ளேக்ஸை நொறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.

3. ஊறிய பன்னீரை எடுத்து கோதுமை மாவு கரைசலில் சேர்த்து, அடுத்து கார்ன் ப்ளேக்ஸில் பிரட்டிக்கொள்ள வேண்டும்.

4. எண்ணெயை சூடாக்கி அதில் இந்த பன்னீரை சேர்த்து பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும். சூப்பர் சுவையான பன்னீர் பாப்கார்ன்கள் தயார்.

இதை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், அவர்கள் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று கேட்பார்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால், நீங்கள் அடிக்கடி செய்து சாப்பிட வேண்டும் என்று விரும்புவீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.