அழகு குறிப்புகள்: ப்யூட்டி பார்லர் வேண்டாம்.. மூன்று பொருள்கள் போதும்.. வீட்டிலேயே ஒளிரும் சருமத்தை பெற இயற்கை ஃபேஷியல்
ப்யூட்டி பார்லர் செல்லாமல் உங்கள் சருமத்தை பளபளப்பாக்கலாம் பல்வேறு வழிகளை வீட்டில் இருந்தபடியே கையாளலாம். குறிப்பாக துளிசி, வேம்பு, க்ரீன் டீ வைத்து இயற்கையான ஃபேஷியல் முயற்சி செய்யலாம். இது சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி பளபளப்பாக்குவதுடன் நல்ல பலனையும் தரும்.ு

வேலைக்கு செல்லும் பெண்கள் முதல் குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் இல்லத்து அரசிகளை வரை அனைவருமே தங்களது சருமம் பளபளப்பாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இதற்காக, அவர்கள் முக அலங்காரம் மற்றும் ப்ளீச்சிங் போன்ற அழகு குறிப்புகளைப் பின்பற்றுகிறார்கள். இவை நன்மை பயக்கும் என்றாலும், அவற்றிக்கென குறிப்பிட்ட தொகையும் செலவு செய்ய வேண்டியுள்ளது.
அதேபோல் சருமத்தைப் பராமரிக்க பல்வேறு கிரீம்கள் மற்றும் லோஷன்களும் பயன்படுத்தப்படுகிறார்கள். இவை சருமத்தை பிரகாசமாகவும், பொலிவாகவும் காட்டுகின்றன. இருப்பினும், அவற்றை அதிகமாகப் பயன்படுத்துவதும் நல்லதல்ல. மேலும், இதுபோன்ற பொருட்களை வாங்குவதற்கு நிறைய பணம் செலவாகும்.
சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி முகத்தை பொலிவு ஆக்குவதற்கு ப்யூட்டி பார்லர் சென்றால் குறைந்தது ரூ. 1000 வரை செலவு செய்ய வேண்டும். நாம் தேர்வு செய்யும் ஃபேஷியல் வகைககளுக்கு ஏற்ப விலைகளில் ஏற்றமும் இருக்கும். ஆனால் பணம் செலவு இல்லாமல் ப்யூட்டி பார்லர் சென்று முகத்தை பொலிவு பெற வைக்கு ஃபேஷியலை எளிதாக வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இதற்கு சிறிது அளவு துளசி இலைகள், வேப்ப இலைகள் மற்றும் பச்சை தேயிலை ஆகியவை போதுமானது. இயற்கையான ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்
