Siddha Remedy : சர்க்கரை நோயா? சிறுநீரக பாதிப்பா? இரண்டையும் கட்டுக்குள் கொண்டுவர – மருத்துவர் கூறுவது என்ன?
Siddha Remedy : சர்க்கரை நோயாலும், சிறுநீரக பாதிப்பாலும் அவதிப்படுபவர்களுக்கு இரண்டையும் கட்டுக்குள் கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர் காமராஜ் விளக்குகிறார்.

நம்மில் பலர் சர்க்கரைநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சர்க்கரை நோய் பாதிப்பு அவர்களுக்கு சிறுநீரக பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் தொல்லைகள் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் கூறுவதைக் கேளுங்கள். இதுகுறித்து, அவர் சமூக வலைதளங்களில் அவர் சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
அவர் கூறியிருப்பாதாவது,
சர்க்கரை நோய்
உடல் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்தும் அளவை பாதிப்பது சர்க்கரை நோய் என்ற அழைக்கப்படுகிறது. குளுக்கோஸ் உடலுக்கு ஆற்றலை வழங்கும் முக்கியமான ஆதாரம் ஆகும். இந்த ஆற்றலால்தான் தசைகள் உருவாகின்றன மற்றும் திசுக்கள் வளர்கின்றன. மூளைக்கும் முக்கியமான ஒன்றாகும்.
இதில் வகைகள் உண்டு. அனைத்து வகையிலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. அதிக சர்க்கரை, கடும் உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.
நாள்பட்ட சர்க்கரை வியாதிகள் டைப் 1 மற்றும் டைப் 2 என்று அழைக்கப்படுகின்றன.
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
நீரிழிவு நோயின் அறிகுறிகள், ரத்தத்தில் எவ்வளவு அதிகம் சர்க்கரை உள்ளதோ அதைப்பொறுத்து மாறுபடும். அதனால் அதன் வகைகளைப் பொறுத்து அறிகுறிகள் தோன்றினாலும், பொதுவான அறிகுறிகளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளவை உள்ளன.
வழக்கத்தைவிட அதிக தாகம்
அதிக முறைகள் சிறுநீர் கழிப்பது
முயற்சியின்றி திடீரென உயிரிழப்பது
சிறுநீரில் கீட்டோன்கள் இருப்பது.
(கிடோன்கள் என்பவை சதை மற்றும் கொழுப்பின் உடைந்த பாகமாகும். இவை உடலில் தேவையான அளவு இன்சுலின் இல்லாதபோது உடைகிறது)
சோர்ந்திருத்தல்
எரிச்சல் கொள்வது மற்றும் மனநிலையில் மாற்றம்
கண்கூச்சம் மற்றும் மங்கலாகத் தெரிவது
புண்கள் மற்றும் காயங்கள் தாமதமாக குணமடைவது
தொற்றுகள் அடிக்கடி ஏற்படுவது. குறிப்பாக பற்களின் ஈறுகள், சருமம் மற்றும் பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்படுவது.
இவையனைத்தும் சர்க்கரை நோயின் அறிகுறிகளாகும்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் தண்ணீர் பருகுவதால் அவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தோன்றும். இதனால் அவர்களின் சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. இரண்டுக்கும் இந்த இரண்டு எளிய டிப்ஸ்கள் போதும் என்று மருத்துவர் கூறுகிறார். இரண்டுக்கும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேவையான பொருட்கள்
ஆவாரம்பூ
பூளைப்பூ எனப்படும் சிறுபீழைப்பூ
என்ன செய்யவேண்டும்?
சிறுபீழைப்பூ எனப்படும் பூளைப்பூவை 30 கிராம் எடுத்து அரவு அரை லிட்டர் தண்ணீரை ஊறவைத்து, காலையில் அதை அடுப்பில் வைத்து காய்ச்சி, 100 மில்லியாக சுண்டியவுடன், காலையில் அதை வெறும் வயிற்றில் பருகவேண்டும்.
மாலையில் ஆவரம்பூ சம்மூலச்சூரணத்தை காலையில் அரை லிட்டர் தண்ணீரில் 30 கிராம் சூரணத்தை ஊறவைத்து, அதை மாலையில் நன்றாக காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவேண்டும். 100 மில்லியாக சுண்வைத்து இதை இரவு உணவு உட்கொள்வதற்கு முன்னர் பருகவேண்டும்.
இதையிரண்டையும் ஆங்கில மருந்து எடுத்துக்கொண்டாலும் சாப்பிடலாம். சிறுநீரக பாதிப்புக்களும் நீங்கும், சர்க்கரை நோயும் கட்டுக்குள் வரும். இவ்வாறு மருத்துவர் காமராஜ் தெரிவித்தார்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்