சித்த மருத்துவம் : மாதவிடாய் நிற்கும் தருணம்; ஹார்மோன்கள் சமமின்மை; நரை முடியால் அவதி? – இயற்கை மருத்துவர் தரும் தீர்வு!
சித்த மருத்துவம் : மாதவிடாய் நிற்கும் தருணத்தில் பெண்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். கடும் முடி உதிர்வு மற்றும் நரை முடி, ஹார்மோன்கள் சமமின்மை என ஏற்படுகிறது. இதில் இருந்து விடுபடும் எளிய வழி ஒன்றை மருத்துவர் ராசா ஈசன் நம்மிடம் கூறுகிறார்.

நமது அழகுக்கு அழகு சேர்ப்பதே தலைமுடிதான். தலைமுடி அழகுடன் மட்டும் இருக்கக்கூடாது. ஆரோக்கியத்துடனும் இருக்கவேண்டும். ஒரு சிலருக்கு நரை முடி இளம் வயதிலேயே ஏற்படும். ஒரு சிலருக்கு மத்திம வயதுகளில் அல்லது அதற்குப்பின்னர் ஏற்படும். சிலருக்கு வயதான காலத்திலும் நரை முடி இருக்காது. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் தருவாயில் ஹார்மோன்கள் சமமின்மை காரணமாக பல்வேறு பிரச்னைகள் வாட்டி எடுக்கும். அதில் இந்த நரைமுடி தொல்லையும் ஒன்று. நரை முடியால் மாதவிடாய் நிற்கும் காலத்தில் அவதிப்படுகிறீர்களா? இதோ உங்களுக்கு ஒரு எளிய தீர்வு. அது என்னவென்று பாருங்கள்.
இதுகுறித்து, திருச்சி இயற்கை பாரம்பரிய மருத்துவர் ராசா ஈசன் கூறியதாவது,
மாதவிடாய் நிற்கும் தருவாயில் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அப்போது ஹார்மோன்களின் சமமின்மை கடுமையாக இருக்கும். இதனால் உடலளவிலும், மனதளவிலும் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நரை முடி, முடி உதிர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே அந்த நேரத்தில் பெண்கள் செய்யவேண்டியது என்னவென்றால்,