தியானம் செய்வதற்கான 7 எளிய வழிமுறைகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தியானம் செய்வதற்கான 7 எளிய வழிமுறைகள்!

தியானம் செய்வதற்கான 7 எளிய வழிமுறைகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Mar 22, 2022 03:25 PM IST

தியானம் பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், சரியான முறைகளை பின்பற்றுவதுன் மூலம் அதிகபட்ச பலன்களைப் பெற முடியும்.

<p>தியானத்தின் ஆரம்ப வழிமுறைகள்&nbsp;</p>
<p>தியானத்தின் ஆரம்ப வழிமுறைகள்&nbsp;</p>

தியானமானது தினசரி மன அழுத்தத்தைத் தடுக்கவும். உடல், மன மற்றும் ஆன்மீகம் ஆகிய அனைத்து அம்சங்களிலும் செயல்படுவதாகக் கூறப்படுகிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உங்களை மகிழ்ச்சியாக வைப்பதற்கும், திருப்தியடையச் செய்வதற்கும் தேவையான மன உறுதியை தருகிறது.

உங்கள் தினசரி தியானப் பயிற்சியின் மூலம், நீங்கள் சிறப்பாக கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், மன அழுத்த சூழ்நிலைகளை நன்கு நிர்வகிக்கவும் முடியும், அதேபோல உங்கள் மன தைரியத்தின் உற்பத்தித்திறன் உயர்வதையும் காணலாம். சில நிமிட தியானம் கூட மன அழுத்தத்தைக் குறைக்கவும், உள் அமைதியை உணரவும் உதவும். இது தூக்கமின்மைக்கு நன்றாக வேலை செய்கிறது மற்றும் பாரம்பரிய சிகிச்சைகளுக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும்.

தியானம் பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், சரியான நுட்பத்தைப் பின்பற்றுவதும், நடைமுறையில் இருந்து அதிகபட்ச பலன்களைப் பெறுவதற்கு அதற்கான வழக்கத்தை அமைப்பதும் முக்கியம். இதுகுறித்து ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்ஸா பவ்சர், ஆரம்பநிலை தியானம் செய்வதற்கான எளிய வழிமுறைகளை பட்டியலிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர், “ தியானத்தின் குறிக்கோள் உங்கள் எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது அல்ல, அவை உங்களைக் கட்டுப்படுத்த நினைப்பதை தடுப்பது" எனத் தெரிவித்துள்ளார். மேலும் தியானம் செய்வதற்கான எளிய வழிமுறைகள் கீழ்காணுமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

தியானம் செய்வது எப்படி

பெரும்பாலான மக்கள் நினைப்பதை விட தியானம் எளிமையானது. கீழ்கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் படித்து, அந்த செயல்முறைகளை நீங்கள் ஓய்வெடுக்கக்கூடிய இடத்தில் அல்லது நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கு செயல்டுத்தத் தொடங்குங்கள். அதற்கான நேரம், முறைகள் ஆகியவற்றிற்கான அட்டவணையை அமைத்துக்கொள்ளுங்கள்.

அமைதியாக உட்காருங்கள்: நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும், மேலும், அமைதியாக இருக்க ஒரு இடத்தைக் கண்டறியவும்.

நேர வரம்பை அமைக்கவும்: நீங்கள் இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றால், ஐந்து அல்லது 10 நிமிடங்கள் போன்ற குறுகிய நேரத்தைத் தேர்வுசெய்ய வேண்டும்.

உங்கள் உடலைக் கவனியுங்கள்: நீங்கள் நாற்காலியில் அமருவதை விட கால்களை மடக்கி தரையில் உட்காரலாம், நீங்கள் தளர்வாக குறுக்கே உட்காரலாம், மண்டியிடலாம். நீங்கள் நிலையாக இருப்பதை உறுதிசெய்து சிறிது நேரம் அப்படியே அமர பழகுங்கள்.

உங்கள் சுவாசத்தை உணருங்கள்: உங்கள் சுவாசம் உள்ளே செல்லும்போதும் வெளியேறும்போதும் அதன் வழியையும் வேகத்தையும் உணர்ந்து பின்பற்றுங்கள்.

உங்கள் மனம் அலைந்து திரிந்ததைக் கவனியுங்கள்: தவிர்க்க முடியாமல், உங்கள் கவனம் மூச்சை விட்டுவிட்டு வேறு இடங்களுக்கு அலையும். சில நொடிகள், ஒரு நிமிடம், அப்போது உங்கள் மனம் அலைந்து திரிந்ததை நீங்கள் கவனிக்கும்போது மீண்டும் உங்கள் கவனத்தை சுவாசத்தில் திருப்புங்கள்.

அலைந்து திரியும் உங்கள் மனதில் கருணையுடன் இருங்கள் : உங்களை நீங்களே மதிப்பிடாதீர்கள் அல்லது நீங்கள் தொலைந்து போகும் எண்ணங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். ஒரே நிதானத்தில் இருக்க முயற்சி செய்யுங்கள்.

கண்களை கவனியுங்கள்: நீங்கள் தியானத்தில் இருக்கும்போது, ​​உங்கள் பார்வையை மெதுவாக உயர்த்தவும் (உங்கள் கண்கள் மூடப்பட்டிருந்தால், அவற்றைத் திறக்கவும்). சிறிது நேரம் ஒதுக்கி, சுற்றுச்சூழலில் ஏதேனும் ஒலிகளைக் கவனியுங்கள். உங்கள் உடல் இப்போது எப்படி உணர்கிறது என்பதைக் கவனியுங்கள். உங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கவனியுங்கள்.

இந்த வழிமுறைகளை பின்பற்றி உங்கள் மனதை அமைதியாக மாற்றிக்கொள்ளுங்கள்.