Sea Water : கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் சரியான விதிமுறைகள் பின்பற்றாவிட்டால் என்னவாகும்?
Sea Water : கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் சரியான விதிமுறைகள் பின்பற்றாவிட்டால் என்னவாகும்?

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்த ஓர் அலசல்.
ஆண்டுக்கு மிகக்குறைந்த மழைப்பொழிவை பெறும் இஸ்ரேலில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்துவதில் வியப்பில்லை.
ஆனால் சென்னை போன்ற மழைப்பொழிவு அதிகம் உள்ள இடங்களில் பெய்யும் மழையை நீர்நிலைகளில் தேக்கி, அதை குடிநீராக பயன்படுத்துவதற்குப் பதிலாக ஆற்றல் அதிகம் தேவைப்படும் மற்றும் கழிவுகளால் கடல்நீர் மேலும் உப்பாகி உள்ளூர் தாவர மற்றும் மீன் வளத்தையும் பாதிக்கும் கடல்நீரை குடிநீராக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்குப் பதிலாக, நீர்நிலைகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாத்து, அவற்றில் நீரைத்தேக்கி அதை குடிப்பதற்கு பயன்படுத்துவது மட்டுமே சிறந்தது என ஜனகராஜன் உட்பட பல நீரியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.