வாட்டி வதைக்கும் மழை மற்றும் பனி! நோய் எதிர்ப்பை அதிகரிக்க குளிருக்கு இதமான பானங்கள் என்ன?
வாட்டி வதைக்கும் மழை மற்றும் பனி! நோய் எதிர்ப்பை அதிகரிக்க குளிருக்கு இதமான பானங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

மழை மற்றும் பனிக்காலங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால், அதில் உள்ள கிருமிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு பெருகிவிடும். அவை உங்கள் உடலுக்கு எண்ணற்ற வியாதிகளைக் கொண்டுவரும். இதனால் உங்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பாற்றவை வளர்க்க நீங்கள் சில தேநீரை அன்றாடம் பருகி வந்தாலே போதும். உங்கள் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலை வழங்கக்கூடிய மூலிகை தேநீர்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். மேலும் இவற்றை தயாரிப்பதும் எளிது என்பதால், அன்றாட உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள். மழைக்காலம் நெருங்கி வரும் வேளையில், உங்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது மிகவும் அவசியம் ஆகும். இது உங்கள் உடலில் பருவ கால சளி மற்றும் தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கும். இந்த மூலிகை பானங்கள் உங்கள் உடலில் ஏற்படும் தொற்றுக்களை அடித்து விரட்டும். இவற்றை தயாரிப்பதும் எளிது. இது உங்கள் ஆரோக்கியத்தை இந்த குளிர் மாதங்களில் பாதுகாக்கும்.
துளசி தேநீர்
துளசி தேநீர் என்பது அனைத்து வீடுகளிலும் செய்யப்படும் ஒன்றாகும். துளசி தேநீர் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு வலு சேர்க்கிறது. எனவே ஒரு டம்ளர் தண்ணீர் 10 துளசி இலைகளை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். அப்படி கொதித்து வரும்போது அதில் கால் ஸ்பூன் மிளகுத்தூள் சேர்க்கவேண்டும். வடிகட்டி, தேன் கலந்து இளஞ்சூடாகப் பருகினால் குளிருக்கு இதமாகவும் இருக்கும். மழைக்கால நோய்களில் இருந்தும் உங்களைக் காக்கும்.
இஞ்சி மற்றும் மஞ்சள் தேநீர்
இஞ்சி மற்றும் மஞ்சள் தேநீரை தயாரிப்பது மிகவும் எளிது. ஒரு டம்ளர் தண்ணீரில் கால் இன்ச் இஞ்சியை துருவி சேர்க்கவேண்டும். கால் ஸ்பூன் மஞ்சளுடன் அதை கொதிக்க விடவேண்டும். இந்த இஞ்சி, மஞ்சள் தேநீர் நன்றாக கொதித்தவுடன் வடிகட்டி, அதில் சில துளி எலுமிச்சை சாறுகளை சேர்த்து, ஒரு ஸ்பூன் தேனுடன் சாப்பிட சுவை அள்ளும். இதை உணவு உண்ட பின் எடுத்துக்கொள்வது செரிமானத்தை அதிகரிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பாற்றலையும் மேம்படுத்துகிறது.
நெல்லிக்காய் டீ
ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்கவிட வேண்டும். அதில் ஒரு நெல்லிக்காயை துருவி விடவேண்டும். ஒரு ஸ்பூன் மிளகு மற்றும் சீரகத்தை தட்டி சேர்த்துக்கொள்ளவேண்டும். இவையனைத்தும் நன்றாக கொதித்தவுடன், அதில் சில புதினா இலைகளை சேர்க்கவேண்டும். பின்னர் வடிகட்டி, அதில் சிறிது இந்துப்பு சேர்த்து பருகினால், இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும். நெல்லிச்சாறில் தண்ணீர் மற்றும் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகுவதும் உங்களுக்கு நல்ல பலனைத்தரும். குளிர் காலத்துக்கு தேவையான ஒன்று இந்த நெல்லிக்காய்.
பட்டை டீ
நல்ல உடல் வளர்சிதைதான், உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும். ஒரு துண்டு பட்டையை தண்ணீரில் கொதிக்கவிடவேண்டும். அதை வடிகட்டி தேன கலந்து பருகவேண்டும். இதை நீங்கள் தினமும் மாலையில் பருகினால், உறங்கும்பபோது உடலுக்கு நல்ல வளர்சிதை மாற்றம் கிடைத்து உங்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
புதினா, துளசி டீ
சில புதினா இலைகள் மற்றும் துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைக்கவேண்டும். இதை வடிகட்டி, சில துளிகள் எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் தேன் கலந்து பருக வேண்டும். இதை மதிய உணவுக்குப்பின் பருகினால், அது உங்களுக்கு சிறப்பான செரிமானத்தைத் தரும் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும்.
கதா
கதா என்பது, ஒரு டம்ளர் தண்ணீரில், கால் இன்ச் துருவிய இஞ்சி, கால் ஸ்பூன் பொடித்த மிளகு, பட்டை, கிராம், துளசி இலைகளை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு தயாரிக்கப்படும் ஒரு பானம் ஆகும். இதை நீங்கள் குளிர் காலங்களில் தினமும் காலை மற்றும் மாலை இருவேளையும் பருகினால், உங்கள் உடலில் பருவகால தொற்றுகள் ஏற்படாமல் இருக்கும்.
எலுமிச்சை புல்
எலுமிச்சை புல்லின் தண்டை நன்றாக கொதிக்கவிடவேண்டும். இதனுடன் துருவிய இஞ்சி சேர்த்து இறக்கி, வடிகட்டி தேன் சேர்த்து பருகவேண்டும். இதை மதிய வேளையில் புத்துணர்ச்ச பெறுவதற்காகப் பயன்படுத்தவேண்டும். இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்