ரோஸ் மில்க் : கோடையைக் குளிர்விக்கும் ரோஸ் மில்க்; செயற்கை கலப்படமில்லாமல் வீட்டிலே செய்யலாம்!
ரோஸ் மில்க் : கோடையைக் குளிர்விக்கும் ரோஸ் மில்க்கை செய்வது எப்படி என்று பாருங்கள். இது இயற்கை முறையில் செயற்கை பொருட்கள் எதுவும் கலக்காமல் செய்யப்படுவதாகும். ரோஸ் மில்க் பிரியர்களுக்கு குஷிதான். இதோ ரெசிபி பாருங்கள்.

கோடையைக் குளுமையாக்க நாம் எண்ணற்ற குளிர் பானங்களை நோக்கி நகர்கிறோம். கடைகளில் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் பானங்கள் அனைத்திலுமே செயற்கை வண்ணங்கள் மற்றும் ப்ரசர்வேடிவ்கள், காஸ் என இருக்கும். அது உடலுக்கு கேடு தருபவைதான். அதற்கு மாற்றாக ஃபிரஷ் பழச்சாறுகளை பருகலாம். அதை நீங்கள் வீட்டிலேயும் செய்து பருகலாம். ஆனால் ஒரே மாதிரியான பழச்சாறுகள் உங்களுக்கு போர் அடிக்கும்போது, ரோஸ் மில்க், பாதாம் மில்க் போன்ற பானங்களை முயற்சிக்கலாம். சூப்பர் சுவையான, கோடையை குளுமையாக்கக் கூடிய ரோஸ் மில்க் பானத்தை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும். அது எப்படி என்று பாருங்கள்.
மேலும் கடைகளில் நீங்கள் சென்று ரோஸ்மில்க் பருகினால் அந்த வண்ணத்தை நீங்கள் கைகளில் தொட்டுப்பார்த்தால், அது கைகளிலே ஒட்டிக்கொண்டு வரும். அந்த அளவுக்கு கடைகளில் உள்ள பானங்களில் செயற்கை வண்ணங்கள் கலந்திருக்கும். நீங்கள் விட்டிலேயே இயற்கையான முறையில் இந்த ரோஸ் மில்கை செய்ய முடியும். அதிலும் இனிப்புக்கு சர்க்கரை கூட கலக்காமல் செய்யலாம். அது எப்படி என்று பாருங்கள். பால் மற்றும் தேங்காய்ப் பால் கலந்து என இரண்டு முறைகளில் நீங்கள் இந்த ரோஸ் மில்க்கை வீட்டிலே தயாரிக்கலாம். இரண்டு முறையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து ரோஸ் மில்க் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
• பன்னீர் ரோஜாப் பூ – 1
