உறவுகள் : உங்கள் இணையர் ஏமாற்றுகிறாரா? எப்படி கண்டுபிடிப்பது என்ற குழப்பமா? இதோ வழிகள்!
உறவுகள் : உங்கள் இணையர் உங்களுக்கு செய்யும் துரோகத்தை அறிந்துகொள்வது எப்படி? இதோ இங்கு சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

காதல் உறவுக்கு அச்சாணியாக இருப்பதே நம்பிக்கைதான். இந்த அடித்தளத்தை துரோகம், நம்பிக்கையின்மை அகியவை அசைத்துவிடும். எனவே உங்கள் இணையர் உங்களிடம் நம்பிக்கையாக நடந்துகொள்கிறாரா? என்பதை அறிந்துகொள்ள இதோ வழிகள். இதற்கு திறந்த உரையாடல் தேவைப்படுகிறது.
துரோகத்தை அறிந்துகொள்வது எப்படி இதோ வழிகள்
நடவடிக்கைகளில் மாற்றம்
இது முதலில் தோன்றும் அறிகுறி. அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இது உங்கள் உரையாடலில் மாற்றத்தை கொண்டு வரும். உங்களுக்கு மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தும். உங்களிடை தூரத்தை உருவாக்கும். நன்றாக பேசக்கூடிய மற்றும் திறந்த மனதுடன் செயல்படக்கூடிய இணையர் திடீரென உரையாடலை குறைத்து உங்களிடம் மழுப்புகிறார் என்றால், அதுகுறித்து நீங்கள் தீவிரமாக கவனிக்க வேண்டும்.
உணர்வு ரீதியிலான தொலைவு
உங்கள் இருவருக்கும் இடையே உணர்வு ரீதியிலான தூரம் அதிகரிக்கிறது என்றால், அதுகுறித்து நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும். உணர்வு ரீதியாக விலகினாலோ அல்லது ஆர்மின்றி இருந்தாலோ அல்லது எதிர்காலம் குறித்த உரையாடல்களை தவிர்த்தாலோ அதற்கு பின் காரணங்கள் உள்ளதென்று அர்த்தம். உணர்வு ரீதியான பிரிதல் சில தொலைவுகளை ஏற்படுத்தும். தனிநபருக்கும் உணர்வு ரீதியான முழுமைக்கு வெளியில் உறவை தேடிச்செல்வார்கள்.