உறவுகள் : ‘என் பிரண்டப்போல யாரு மச்சான்’ நீங்கள் நட்புடன் பழகக்கூடாத நபர்கள் யார் என்று பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உறவுகள் : ‘என் பிரண்டப்போல யாரு மச்சான்’ நீங்கள் நட்புடன் பழகக்கூடாத நபர்கள் யார் என்று பாருங்கள்!

உறவுகள் : ‘என் பிரண்டப்போல யாரு மச்சான்’ நீங்கள் நட்புடன் பழகக்கூடாத நபர்கள் யார் என்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Updated Mar 13, 2025 05:40 PM IST

உறவுகள் : ‘என் பிரண்டப்போல யாரு மச்சான்’ நீங்கள் நட்புடன் பழகக்கூடாத நபர்கள் யார் என்று பாருங்கள்!

உறவுகள் : ‘என் பிரண்டப்போல யாரு மச்சான்’ நீங்கள் நட்புடன் பழகக்கூடாத நபர்கள் யார் என்று பாருங்கள்!
உறவுகள் : ‘என் பிரண்டப்போல யாரு மச்சான்’ நீங்கள் நட்புடன் பழகக்கூடாத நபர்கள் யார் என்று பாருங்கள்!

சுயநலம்

நீங்கள் நட்புடன் பழகும் நபர் கட்டாயம் சுயநலவாதியாக இருக்கக்கூடாது. எப்போதும் நட்பு என்பது இருபுறமும், பெறுவது, கொடுப்பது என இருக்கவேண்டும். அது அன்பு, நட்போ, அக்கறையோ ஒருவர் மீது மற்றொருவர் காட்டும் அக்கறை இருபுறமும் ஒரே அளவாக இருக்கவேண்டும். ஒருவர் தன்னைப்பற்றி மட்டும் பேசிவிட்டு மற்றவர் மீது அக்கறைகொள்ளாவிட்டால், அந்த நட்பு நீண்ட காலம் இருக்காது.

உங்களை மாற்றுபவர்கள்

சில நண்பர்கள், உங்களின் உணர்வுகள், குற்றவுணர்வுகள், பொய்கள் என அவர்கள் உங்களை மாற்றுவார்கள். உங்களை கட்டுப்படுத்துவார்கள். எனவே நீங்கள் அதுபோன்ற நபர்களிடம் இருந்து விலகியிருத்தல் நலம்.

டிராமா குயின்

சிலர் மற்றவர்களுக்கு எப்போது அழுத்தத்தைக் கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள். அவர்களிடம் இருந்து விலகியிருத்தல் நலம். சிலர் அதிகமாக நடிப்பார்கள். அவர்கள் எப்போதும் உறவில் சிக்கலை ஏற்படுத்தும் நபராக இருப்பார்.

உங்கள் உடன் இருந்துகொண்டே உங்கள் மீது பொறாமைபடுபவர்கள்

உங்களுக்கு நண்பர்களாக இருப்பார்கள். உங்களுடனே இருப்பார்கள். ஆனால் உங்கள் மீது பொறாமை கொள்பவர்களாக இருப்பார்கள். அவர்களை நீங்கள் நம்பக்கூடாது. அவர்கள் கட்டாயம் உங்கள் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கக்கூடாது.

குறை கூறுபவர்

எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள் உங்கள் நட்பு வட்டத்தில் இருந்தால், அவர்கள் உங்களின் ஆற்றலை நீர்க்கச் செய்துவிடுவார்கள். அவர்கள் உங்களின் நேர்மறை பக்கங்களைப் பார்க்கமாட்டார்கள். அவர்களுடன் சேர்ந்தால் நீங்களும் பாதிக்கப்படுவீர்கள்.

ஏமாற்றும் நபர்

சிலர் நம்பிக்கையை அடிக்கடி உடைக்கும் நபராக இருப்பார்கள். பொய்களைக் கூறுவார்கள். அவர்களுக்கு தேவைப்படும்போது அவர்கள் தங்களுக்கு ஏற்றாற்போல் உங்களை பயன்படுத்திக்கொள்வார்கள். எனவே இவர்களிடம் எச்சரிக்கையுடனும், அவர்களிடம் இருந்து விலகியும் இருங்கள்.

பொறாமை கொண்ட நபர்

உங்களை நினைத்து மகிழ்ச்சி கொள்ளாதவர், உங்களுக்காக சந்தோசமாக இருக்காதவர்களிடம் இருந்து நீங்கள் விலகியிருத்தல் நலம்.

மனிதர்களை பயன்படுத்திக்கொள்பவர்கள்

சிலர் எப்போதும் மற்றவர்களை பயன்படுத்தும் பழக்கம் கொண்ட நபராக இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு எப்போதும் உதவ மாட்டார்கள். அவர்களுக்கு நீங்கள் பயனில்லையென்றால், அவர்கள் உங்களை விலக்குவதில் தயக்கம் காட்ட மாட்டார்கள். ஆனால் உண்மை நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள். விலகவும் மாட்டார்கள்.

நம்பகமற்ற நபர்

நம்பகமற்ற நபர் எப்போதும் திட்டங்களை நீக்கிக்கொண்டே இருப்பார். அவர்கள் தவறான வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள். உங்களுக்கு அனைத்து சூழல்களில் நம்பகமான நபராக இருக்க மாட்டார்கள்.

எதிர்மறை எண்ணம் கொண்ட நபர்

உங்கள் கனவுகளை தகர்த்து விடுவார்கள். உங்களுக்கு எப்போதும் ஊக்கமளிக்க மாட்டார்கள், உங்களை டிஸ்கரேஜ் செய்யும் நபராக இருப்பார்கள். எனவே அவர்களிடம் இருந்து விலகியிருத்தல் உங்கள் மன அமைதி மற்றும் வெற்றிக்கு நல்லது.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.