Relationship : காத கொடுங்க! திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமா? ரகசியத்த தெரிஞ்சுக்கங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship : காத கொடுங்க! திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமா? ரகசியத்த தெரிஞ்சுக்கங்க!

Relationship : காத கொடுங்க! திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமா? ரகசியத்த தெரிஞ்சுக்கங்க!

Priyadarshini R HT Tamil
Published Jul 26, 2024 02:00 PM IST

Relationship : திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமெனில் அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? இதுதான் ரகசியம். அதை தெரிந்துகொள்ளுங்கள்.

Relationship : காத கொடுங்க! திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமா? ரகசியத்த தெரிஞ்சுக்கங்க!
Relationship : காத கொடுங்க! திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமா? ரகசியத்த தெரிஞ்சுக்கங்க!

முக்கிய குறிப்பு

உங்கள் பார்ட்னரின் முக்கிய உள்நோக்கத்தை புரிந்துகொள்ளுங்கள். திருமண உறவை தொடர்ந்து நகர்த்தி செல்ல அதை முழுமையாக்க நாம் என்ன செய்யவேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

வெளிப்படையான திறந்த உரையாடல்

வெளிப்படையான, நேர்மையான, அனுதாபம் நிறைந்த உரையாடல் என்பது வலுவான திருமண உறவுக்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே அதற்கு உளவியல் நிபுணர்கள் தம்பதிகள் ஒருவர் கூறுவதை ஒருவர் உற்று கவனிக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். எவ்வித விமர்சனமும் இன்றி, சிந்தனைகள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

ஒன்றாக இணைந்து தரமான நேரம்

உங்கள் இணையருடன் ஒன்றாக இணைந்து தரமான நேரம் செலவிடுவது மிகவும் அவசியம். உளவியல் நிபுணர்கள், வழக்கமாக இரவு உங்கள் பார்ட்னருடன் உணவுக்கு எங்கேனும் வெளியே செல்வது மற்றும் அர்த்தமுள்ள உரையாடல்கள் முதல் உணர்வு ரீதியான தொடர்பு வரை நீங்கள் அவர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம் என்று கூறுகிறார்கள்.

சண்டைக்கு தீர்வு காணும் திறன்

சண்டைக்கு தரமான தீர்வு காண கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். உளவியல் நிபுணர் கூறுகையில், எப்போம் நான் என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள், அடுத்தவர்களை குறைகூறுவதை தவிருங்கள், தீர்வு காண்பதற்கான சமரச முயற்சிகளை எடுங்கள். இது இரண்டு பார்ட்னருக்குமே சிறந்தது.

உணர்வு ரீதியாக உடன் நிற்பது

சவாலான நேரங்களில் உங்கள் பார்ட்னருடன் உறுதுணையாக உடன் துணை நிற்பது மிகவும் அவசியம். இணையர் இருவரின் நம்பிக்கை மற்றும் சவுகர்யம் மிகவும் முக்கியமானது. எனவே உங்களுக்குள் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

பகிரப்பட்ட இலக்குகள் மற்றும் மதிப்பீடுகள்

தனிப்பட்ட மற்றும் பொதுவான இலக்குகள், மதிப்புகள் வலுவான திருமணத்திற்கு ஆதாரம் ஆகும். உளவியல் நிபுணர்கள், நீண்ட நாள் திட்டங்கள் மற்றும் மதிப்பீடுகள் என உறவின் துவக்கத்திலேயே இணக்கத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

நன்றி மற்றும் பாராட்டுகள்

உங்களின் நன்றியை வெளிப்படுத்துங்கள் மற்றும் உறவில் பாராட்டுக்கள் என்பது மிக முக்கியமான ஒன்று. உளவியல் நிபுணர்கள் இணையர்கள் தொடர்ந்து ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்ளவேண்டும் என்றும், அதை வழக்கமாகக்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள். ஒவ்வொருவரின் முயற்சியையும், அன்பு, நன்றி என அனைத்தையும் குறிப்பிட்டு காட்டி அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.

சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட அதிகாரம்

தம்பதிபதிகள் இரண்டு பேருக்கும், தனிப்பட்ட அடையாளம் அவசியம். இதுதான் அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும். எனவே தனிப்பட்ட அதிகாரம் மற்றும் இருவரின் சுதந்திரத்தை இருவரும் மதிக்கவேண்டும் என்றும், அவரவரின் விருப்பத்தை அவரவர்கள் நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்றும், அதற்கு இருவரும் ஒருவருக்கொருவர் உதவவேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

மன்னித்தல் மற்றும் மறத்தல்

மன்னித்தல் மற்றும் மறத்தல்தான் எந்த உறவிற்கும், மிக முக்கியமான ஒன்று என்றும், அதிலும் தம்பதிகளுக்கு இது மிகவும் அவசியம் என்று அவர்கள் கருதுகிறார்கள். எனவே தவறுகளை மன்னித்து, ஒருவருக்கொருவர் இணக்கமாக இருந்து உறவில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கவேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.