அதிகரித்து வரும் ஆஸ்துமா நோயாளிகள்! விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உலக ஆஸ்துமா தினம்! நோக்கமும் முக்கியத்துவமும்!
உலக ஆஸ்துமா தினம் என்பது உலகளவில் ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் ஒரு உலகளாவிய சுகாதார நிகழ்வாகும் . இந்த ஆண்டு 2025 உலக ஆஸ்துமா தினம் மே 6 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

ஆஸ்துமா என்பது நாள்பட்ட சுவாசக் கோளாறு ஆகும். ஆஸ்துமா ஏற்பட்டால், மூச்சுக்குழாய்கள் வீங்கலாம், குறுகலாம், மற்றும் அதிகப்படியான சளி சவ்வினால் மூடப்படலாம், இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இது பரம்பரை, சுற்றுசூழல் காரணிகள் என பல்வேறு காரணிகளால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் வரக்கூடிய நோயாகும். அதிலும் நவீன உலகில் ஏற்படும் சுற்றுசூழல் மாசுபாட்டினால் ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உலக ஆஸ்துமா தினம்
உலக ஆஸ்துமா தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கக்கப்படுகிறது. இந்த தினம் மக்களிடத்தில் ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆஸ்துமா நோயாளர்களின் வாழ்வை மேம்படுத்தவும், சிகிச்சை முறைகளை அனைவரிடத்திலும் கொண்டு செல்லும் நோக்கிலும் கொண்டாடப்படுகிறது.