பூசணிக்காய் கூட்டுக்கறி : கேரளா ஸ்டைலில் பூசணிக்காய் – தேங்காய் கூட்டுக்கறி; சூப்பர் சுவையான ரெசிபி இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பூசணிக்காய் கூட்டுக்கறி : கேரளா ஸ்டைலில் பூசணிக்காய் – தேங்காய் கூட்டுக்கறி; சூப்பர் சுவையான ரெசிபி இதோ!

பூசணிக்காய் கூட்டுக்கறி : கேரளா ஸ்டைலில் பூசணிக்காய் – தேங்காய் கூட்டுக்கறி; சூப்பர் சுவையான ரெசிபி இதோ!

Priyadarshini R HT Tamil
Updated Mar 26, 2025 11:50 AM IST

பூசணிக்காய் கூட்டுக்கறி : பூசணிக்காய் சிலருக்கு சாம்பாரில் சேர்த்து சாப்பிட பிடிக்காது. அவர்கள் இதுபோன்ற ஒரு பருப்பு கூட்டுக்கறியாக செய்து சாப்பிடும்போது, அது வித்யாசமான சுவையைத் தரும். இதை உங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

பூசணிக்காய் கூட்டுக்கறி : கேரளா ஸ்டைலில் பூசணிக்காய் – தேங்காய் கூட்டுக்கறி; சூப்பர் சுவையான ரெசிபி இதோ!
பூசணிக்காய் கூட்டுக்கறி : கேரளா ஸ்டைலில் பூசணிக்காய் – தேங்காய் கூட்டுக்கறி; சூப்பர் சுவையான ரெசிபி இதோ! (udupi recipes )

தேவையான பொருட்கள்

• பூசணிக்காய் – கால் கிலோ

• பாசிப்பருப்பு – கால் கப்

• உப்பு – தேவையான அளவு

• மஞ்சள் தூள் – கால் கப்

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

• தேங்காய்த் துருவல் – ஒரு கப்

• வர மிளகாய் – 6

• சின்ன வெங்காயம் – 6

• பூண்டு – 4 பல்

தாளிக்க தேவையான பொருட்கள்

• தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை

• வர மிளகாய் – 1

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

1. பூசணிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும். பாசிப்பருப்பை அலசி அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பூசணிக்காய் துண்டுகளையும் சேர்த்து குக்கரில் வைத்து 5 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவேண்டும். குக்கர் ரிலீஸ் ஆனவுடன் அதைத் திறந்து கடைந்துகொள்ளவேண்டும்.

2. துருவிய தேங்காய் மற்றும் வர மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு என அனைத்தையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

3. பூசணிக்காய் பருப்பு கலவையில் இந்த மசாலாவை சேர்த்துக்கொள்ளவேண்டும். அனைத்தையும் நன்றாக கலந்து தண்ணீர் வீட்டு கொதிக்கவிடவேண்டும். குறைவாக தீயில் நன்றாக வேகவிடவேண்டும்.

4. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், கடுகு தாளிக்கவேண்டும். அது வெடித்தவுடன், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்க்கவேண்டும். இந்த தாளிப்பை பூசணிக்காய், பாசிப்பருப்பு கலவையில் சேர்க்கவேண்டும். அனைத்தையும் நன்றாக கலந்துவிடவேண்டும்.

ஒரு கொதிவிட்டு, இறக்கினால் சூப்பர் சுவையான பூசணிக்காய் பருப்புக்கறி தயார். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இதை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள் அத்தனை சுவையானது. காரம் இல்லாததால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்புவார்கள். ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.