Puducherry Special : புதுச்சேரி ஸ்பெஷல் பன்னீர் பட்டர் மசாலா சாப்பிட்டுக்கொண்டே இருக்கத் தூண்டும் சுவை கொண்டது!
Puducherry Special : புதுச்சேரி ஸ்பெஷல் பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி என்று பாருங்கள். இப்படி செய்து வைத்துவிட்டால், சாப்பிட்டுக்கொண்டே இருக்கத் தூண்டும் அளவுக்கு சுவையைக் கொண்டது.

தேவையான பொருட்கள்
• பன்னீர் – 200 கிராம்
• பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
• தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
• இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்
• முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்
• பச்சை மிளகாய் – 1
• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
• மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
• கஷ்மரி மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
• உப்பு – தேவையான அளவு
• கசூரி மேத்தி – ஒரு ஸ்பூன்
• ஃபிரஷ் கிரீம் – 2 டேபிள் ஸ்பூன்
• மல்லித்தழை – சிறிதளவு
• வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
• மல்லி விதைகள் – ஒரு டேபிள் ஸ்பூன்
• சர்க்கரை – ஒரு ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
• வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
• பிரியாணி இலை – 1
• பட்டை – 1
• கிராம்பு – 2
• ஏலக்காய் – 1
• ஸ்டார் சோம்பு – 1
செய்முறை
1. நீங்கள் வீட்டில் செய்த பன்னீர் என்றால் ஊறவைக்க தேவையில்லை. ஆனால் வெளியில் வாங்கி, ஃபிரிட்ஜில் வைத்தது என்றால், அதை சூடான தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிவேண்டும்.
2. மல்லி விதைகளை எடுத்து நன்றாக சிறிய உரலில் சேர்த்து பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
3. பன்னீரை சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
வெங்காயம் – தக்காளி பேஸ்ட்
1. ஒரு கடாயில் 3 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அது நன்றாக உருகியவுடன், அதில் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். அடுத்து வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவேண்டும்.
2. அடுத்து பொடித்த வரமல்லி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து முந்திரி சேர்த்து தக்காளி குழைந்து வரும் வரை வதக்கி, ஆறவைத்துவிடவேண்டும்.
3. நன்றாக ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து போதிய அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து பேஸ்ட்டை தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.
மசாலா செய்வது எப்படி?
4. ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் சேர்த்து உருகியவுடன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரயாணி இலை, ஸ்டார் சோம்பு சேர்த்து பொரியவிடவேண்டும்.
5. அடுத்து அதில் வெங்காயம் மற்றம் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து கலந்துகொள்ளவேண்டும். மிக்ஸியைக் கழுவிய தண்ணீரையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
6. நன்றாக கலந்து கொதிக்கவிடவேண்டும். இதில் ஒரு ஸ்பூன் கஷ்மீரி மிளகாய்த் தூள் மற்றும் சர்க்கரையை சேர்க்கவேண்டும்.
7. அடுத்து பன்னீரைச் சேர்த்து மூடிவைத்து நன்றாக வேகவிடவேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். நன்றாக கொதித்த வந்தவுடன், அதில் கசூரி மேத்தி மற்றும் ஃபிரஷ் கிரீம் சேர்த்து இறக்கவேண்டும். இறக்கியபின் பொடியாக நறுக்கிய மல்லித்தழையை தூவி கலந்துவிட்டால் சூப்பர் சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்.
8. இதை சப்பாத்தி, பூரி, ரொட்டி, நான் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

டாபிக்ஸ்