Puducherry Crab Masala : புதுச்சேரி நண்டு மசாலா; சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்; இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Puducherry Crab Masala : புதுச்சேரி நண்டு மசாலா; சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்; இதோ ரெசிபி!

Puducherry Crab Masala : புதுச்சேரி நண்டு மசாலா; சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்; இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Updated Mar 07, 2025 09:29 AM IST

Puducherry Crab Masala : புதுச்சேரி நண்டு மசாலா, நாவில் எச்சில் ஊறவைக்கும் உணவு. இதை செய்வது எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை தெரிந்துகொண்டு, செய்து பாருங்கள்.

Puducherry Crab Masala : புதுச்சேரி நண்டு மசாலா; சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்; இதோ ரெசிபி!
Puducherry Crab Masala : புதுச்சேரி நண்டு மசாலா; சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்; இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

வறுக்க தேவையான பொருட்கள்

• எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• பூண்டு – 6 பற்கள்

• இஞ்சி – ஒரு இன்ச்

• மல்லி விதைகள் – 2 ஸ்பூன்

• மிளகு – 2 ஸ்பூன்

• வர மிளகாய் – 8

(ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் பூண்டு, இஞ்சி, மல்லி விதைகள், மிளகுத்தூள் மற்றும் வர மிளகாய் சேர்த்து வறுக்கவேண்டும். அதை ஆறவைத்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து நல்ல பேஸ்டாக அரைத்துக்கொள்ளவேண்டும்)

மசாலா செய்ய தேவையான பொருட்கள்

• எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

• சீரகம் – அரை ஸ்பூன்

• கடுகு - அரை ஸ்பூன்

• பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

• பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

• தக்காளி – 5 (பொடியாக நறுக்கியது)

• உப்பு – தேவையான அளவு

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• நண்டு – 2 கிலோ

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவேண்டும். வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

2. வெங்காயம் பொன்னிறமானவுடன் அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். அடுத்து பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக மசியவிடவேண்டும்.

3. கடைசியாக உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து நன்றாக தக்காளி மசிய வேகவிடவேண்டும் அடுத்து கறிவேப்பிலை சேர்த்து மசாலாவின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.

4. அடுத்து சுத்தம் செய்த நண்டு சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும். நண்டு மற்றும் மசாலாவுடன் சேர்ந்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.

இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதை நண்டை சாப்பிடும்போது, கவனமாக சாப்பிடவேண்டும். அதேபோல் குழந்தைகளுக்கு கொடுக்கும்போதும் கவனம் தேவை.

இந்த புதுச்சேரி நண்டு மசாலாவை நீங்கள் ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று கேட்பீர்கள். அத்தனை சுவையானது. ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.