Relationship Issues: புதுமண தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டையா? இது தான் காரணம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship Issues: புதுமண தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டையா? இது தான் காரணம்!

Relationship Issues: புதுமண தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டையா? இது தான் காரணம்!

Suguna Devi P HT Tamil
Published Sep 26, 2024 06:08 PM IST

Relationship Issues: காதல் திருமணம் அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணம் என எந்த திருமானமாக இருந்தாலும் சிலரது வாழ்வில் பிரச்சனைகளை கொண்டு வருகிறது. அதற்கு காரணம் அந்த தம்பதியினரின் புரிந்து கொள்ளாமையே.

Relationship Issues: புதுமண தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டையா? இது தான் காரணம்!
Relationship Issues: புதுமண தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டையா? இது தான் காரணம்!

போதாத காதல் 

முதலில் திருமணம் ஆகி சில மாதங்களில் வரும் முக்கிய பிரச்சனை, ஒருவர் ஆதீதமாக எதிர்பார்க்கும் காதல் கிடைக்காமல் போவதே ஆகும். ஏனெனில் காதலிக்கும் போது இருவரும் பிரிந்த வெவ்வேறு இடங்களில் வாழ்வார்கள். திருமணம் ஆனதும் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ வேண்டியதாகி இருக்கும்.  அப்போதுதான் பிரச்சனயே தொடங்கும். காதலிக்கும் காலத்தில் கிடைத்த அன்பும், அரவணைப்பும் திருமணம் ஆன பின் குறைகிறது. 

இதற்கு காரணமாக சிலர் அவர்களது வேலை, குடும்ப சூழ்நிலையை காரணமாக கூறுகின்றனர். சிலர் காதலிக்கும்  நபர் மீது அதிக அபசேசேட் ஆக இருப்பர். திருமணம் ஆன பின் அந்த ஆவல் குறைகிறது. 

பொருளாதார நெருக்கடி 

திருமணம் ஆகிய இருவரும் தனியாக இருந்த போது அவர்கள் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் மட்டுமே. ஆனால் திருமணம் நடந்து தனியாக வாழும் போது அவர்களே இந்த குடும்பத்தின் தலைமை பொறுப்பில் இருக்கக வேண்டும். எனவே பல பொருளாதார ரீதியான நெருக்கடிகள் வருவது இயல்பு. அதையும் நிதானமாக செயல் பட வேண்டும்.  

வீட்டு வேலைகள் 

இரு வேறு குடும்பத்தில் வளர்ந்த இருவர் சேர்ந்து வளரும் போது, அவர்களது தனிபட்ட குடும்பத்தில் உள்ள பழக்க வழக்கங்களை பின்பற்றுவார்கள். இதுவும் அடிக்கடி சண்டை வார காரணமாக இருக்கலாம். வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்யப் பழக வேண்டும். இருவரும் இணைந்தே வீட்டு வேலைகளை செய்ய வேண்டும். ஒருவர் மட்டும் அத்தனை வேலைகளை செய்யும் போது மிகுந்த கோபத்தை கொடுக்கும். இதனை தடுக்க இருவரும் சேர்ந்த பணியாற்ற வேண்டும். 

உறவுகளால் விரிசல் 

இருவர் தரப்பிலும் உள்ள அவர்களது உறவினர்களாலும் அடிக்கடி சண்டை வரும். இணையரின் உடன் பிறந்தவர்கள், அவர்களது பெற்றோர் என பலரும் சரிவர புரிந்து கொள்ளாமல் வாக்கு வாதத்தில் ஈடுபடலாம். இதனை சரிசெய்ய அந்த இணையரே அவரது உறவினர்களிடம் பிரச்சனையை விலக்கி எடுத்துச் சொல்ல வேண்டும்.   

செக்ஸ் பிரச்சனைகள் 

ஒரு திருமண வாழ்வை உறுதி படுத்துவதில் முக்கியமான பங்கு  செக்ஸ் ரீதியான செயல்பாடுகளுக்கு அதிகம் உள்ளது. தங்களது பார்ட்னர் எதிர்ப்பார்க்கும் அனைத்தையும் செய்வதற்கு முயற்சி செய்யா வேண்டும். மேலும் இதில் வெளிப்படையாக பேசி அதில் உள்ள சிக்கலகளை தீர்க்க முயல வேண்டும்.  இந்த அனைத்து காரணிகளையும் தொடர்ந்து ஆராய்ந்து அதை தீர்க்க வேண்டும். ஒரு திருமண வாழ்வில் இருவரும் இணைந்து ஒத்த முடிவுகளை எடுத்து பிரச்சனைகளை தீர்க்க முயல வேண்டும்.