Pre-eclampsia : பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்தக்கொதிப்பு.. அதன் அறிகுறிகள் என்ன? செய்ய வேண்டியது இதுதான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pre-eclampsia : பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்தக்கொதிப்பு.. அதன் அறிகுறிகள் என்ன? செய்ய வேண்டியது இதுதான்!

Pre-eclampsia : பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்தக்கொதிப்பு.. அதன் அறிகுறிகள் என்ன? செய்ய வேண்டியது இதுதான்!

Divya Sekar HT Tamil
May 23, 2024 06:00 AM IST

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்தக்கொதிப்பை (Pre-eclampsia)ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பாதுகாப்பான தாய்மையை உறுதிபடுத்தலாம்.

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்தக்கொதிப்பு.. அதன் அறிகுறிகள் என்ன? செய்ய வேண்டியது இதுதான்!
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்தக்கொதிப்பு.. அதன் அறிகுறிகள் என்ன? செய்ய வேண்டியது இதுதான்!

கர்ப்ப காலத்தில் பொதுவாக 20 வாரங்களுக்குப் பிறகு இரத்தஅழுத்தம் 140/90 க்கு அதிகமாக இருந்தாலோ,சிறுநீரில் புரதத்தின் அளவு 300 மிகி/நாள்-அதிகமாக இருந்தாலோ,அதை Pre-eclampsia என அழைப்பர்.

இள வயதில் இரத்தக்கொதிப்பு

அதை ஆரம்பத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் தாய்-சேய் நலனை உறுதிபடுத்த முடியும். இந்தியாவில் 7.1% கருவுற்ற பெண்களின் இறப்பிற்கு, பேறு காலத்தில் ஏற்படும் இரத்தக்கொதிப்பு காரணமாக உள்ளது. 

பேறு காலத்தில் ஏற்படும் இரத்தக்கொதிப்பு காரணமாக சேய்க்கு-இள வயதில் இரத்தக்கொதிப்பு, வளர்சிதை மாற்ற பாதிப்பு(Metabolic syndrome),இருதயப் பிரச்சனை,இரத்தத்தில் கொழுப்பு பிரச்சனை(Dyslipidemia),மூளை பாதிப்பு(Stroke)-பாதிப்புகள் பிற்காலத்தில் ஏற்படுவதோடு,சுகாதாரத்துறைக்கும் சிகிச்சை அளிக்க, அது பெரும் சுமையை ஏற்படுத்தும்.

Pre-eclampsia பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கும்,இருதய செயலிழப்பு(Heart Failure)ஏற்படும் வாய்ப்பு 4 மடங்கு அதிகமாகவும், இருதய இரத்தக்குழாய்களில் பாதிப்பும்,மூளை பாதிப்பும்(Stroke),இருதயப் பிரச்சனைகளால் முன்கூட்டிய உயிரிழப்பு(Cardiovascular Mortality)ஏற்படுவது 2 மடங்கு அதிகம் இருப்பதும் ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் போதிய முக்கியத்துவம் இல்லை

இப்படி இருந்தும்,பேறு காலத்தில் இரத்தக்கொதிப்பால்(Pre-eclampsia)பாதிக்கப்பட்ட பெண்களுக்கு,பிரசவம் முடிந்தவுடன்,இருதயப்பிரச்சனைகள் ஏற்படுவதை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் ஆய்வுகளுக்கு இந்தியாவில் போதிய முக்கியத்துவம் இல்லை.!

இந்தியாவில் 25% பிரசவங்கள் வழக்கமாக நடைபெறாமல் ஏதோ ஒரு பிரச்சனையை சந்தித்து வருவது ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் National Family Health Survey-NFHS-5 ஆய்வுப்படி,Perinatal mortality rate-1000 பிரசவங்களில் 32 எனவும்,பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம்(Neonatal Mortality rate-1000 உயிருடன் பிறக்கும் குழந்தைகளில்,25 எனவும் அதிகமாக உள்ளது.

Pre-eclampsia அறிகுறிகள்

முகம்,கை,கால்களில் அதிக வீக்கம்,

தாங்க முடியாத தலைவலி,

கண் பார்வை கோளாறுகள்,

மேல் வயிற்று வலி,

மூச்சுத் திணறல்... போன்றவை.

2 மற்றும் 3ஆம் Trimester களில் - இரத்தஅழுத்த,சிறுநீர் பரிசோதனைகளில் Pre-eclampsia பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய முடியும். 

வண்ண டாப்லர் அல்ட்ராசௌண்ட்(Colour Doppler Ultrasound)பரிசோதனை பேறுகால இரத்தக்கொதிப்பு பிரச்சனையை ஆரம்பத்தில் கண்டறிய உதவும் என்பதால் அரசு அதில் போதிய கவனம் செலுத்த வேண்டும்.(increased pulsatility, Resistive indices-தெளிவாக பார்க்க முடியும்.)

தமிழகத்தில் சென்னையில் அக்டோபர்-டிசம்பர் 2018ல்,  200 பேருக்கு பிரசவிப்பதற்கு முன்னர் (Antenatal mothers)செய்யப்பட்ட ஆய்வில் 90 பேருக்கு உயர் இரத்தஅழுத்தம் இருந்தது தெரியவந்துள்ளது. 

அவர்களில் 45%- முதல் பிரசவம்(Primi),40.1% பேர் குறைந்த சமூக,பொருளாதார வகுப்பைச் சேர்ந்தவர்கள்,49.8% பேரின் BMI-Body Mass Index-26-30 என அதிகமாக இருந்துள்ளது.(ரெஷ்மி விஸ்வாம்பரன் அவர்கள் செய்த ஆய்வு.)

2020ல் வெளிவந்த ஆய்வில்

சேலம்,இரங்கஇராஜன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2020ல் வெளிவந்த ஆய்வில் பின்வரும் விபரங்கள் தெரியவந்துள்ளது. 

பேறு காலத்தில் இரத்தக்கொதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள்-10.4%.(19,383 பேர் கலந்து கொண்ட ஆய்வில்,2028 பேருக்கு பாதிப்பு இருந்தது.)இதில் Pre-eclampsia வால் பாதிக்கப்பட்டவர்கள்-32.6%. முதல் பிரசவம்-54%, 18-22வயதினர் மத்தியில் பாதிப்பு அதிகம் இருந்தது. 

Pre-eclampsia வால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு அதிக இரத்தப்போக்கு பாதிப்பு 15% பேருக்கு இருந்தது. 

தாய்மார்களுக்கு HELLP syndrome(Haemolysis,Elevated Liver Enzymes,Low Platelet)பாதிப்பும் இருந்தது.

சேய்- 29% பேர் குறைப்பிரசவத்தில்(Prematurity) பிறந்தவர்கள்.

மேற்கண்ட ஆய்வுகள் சமூக,பொருளாதாரத் தளங்களில் பெருமளவு மாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டுமே தாய்/சேய் உயிரிழப்புகள்/பாதிப்புகளை குறைக்க முடியும் என வலியுறுத்துகின்றன.

The Indian Radiological and Imaging Association(IRIA)-"Samrakshan" திட்டம் மூலம்,இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்,அடுத்த 10 ஆண்டுகளில் Pre-eclampsia பாதிப்பை தற்போதுள்ள 8-10%ல் இருந்து 3% ஆக குறைக்கவும்,பிறக்கும் குழந்தையின் எடை குறைப்பாட்டை 25-30%ல் இருந்து 10%ஆக குறைக்கவும் திட்டங்கள் தீட்டினாலும்,அரசு/மக்களின் விழிப்புணர்வு,ஒத்துழைப்பின்றி இவை வெற்றிபெற முடியாது. தகுந்த தலைமையும் இலக்கை எட்ட முக்கியமானது.

பேறுகால இரத்தக்கொதிப்பால் தாய்/சேய் பாதிக்கப்படுவதை நிறுத்த நடைமுறையில் சிறப்பான திட்டங்கள் தேவை என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

நன்றி : மரு.வீ.புகழேந்தி.  

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.