பீர்க்கங்காய் துவையல் : இனி பீர்க்கங்காய் தோலை தூக்கி வீசாதீர்கள், அதில் சுவையான துவையல் செய்யலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பீர்க்கங்காய் துவையல் : இனி பீர்க்கங்காய் தோலை தூக்கி வீசாதீர்கள், அதில் சுவையான துவையல் செய்யலாம்!

பீர்க்கங்காய் துவையல் : இனி பீர்க்கங்காய் தோலை தூக்கி வீசாதீர்கள், அதில் சுவையான துவையல் செய்யலாம்!

Priyadarshini R HT Tamil
Updated Mar 26, 2025 04:37 PM IST

பீர்க்கங்காய் தோல் துவையல் : இதை ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்போது கூடுதல் சுவையைத் தருகிறது. குறிப்பாக எலுமிச்சை சாதம் அல்லது மற்ற வெரைட்டி சாதத்துடனும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

பீர்க்கங்காய் துவையல் : இனி பீர்க்கங்காய் தோலை தூக்கி வீசாதீர்கள், அதில் சுவையான துவையல் செய்யலாம்!
பீர்க்கங்காய் துவையல் : இனி பீர்க்கங்காய் தோலை தூக்கி வீசாதீர்கள், அதில் சுவையான துவையல் செய்யலாம்!

தேவையான பொருட்கள்

• பீர்க்கங்காய் – 1

• வரமிளகாய் – 2

• தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

• உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்

• புளி – எலுமிச்சை அளவு

• பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை

• எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. பீர்க்கங்காயை நன்றாக அலசி அதன் தோலை மட்டும் உறித்து எடுத்துக்கொள்ளவேண்டும். பீர்க்கங்காயை மஞ்சள் மற்றும் உப்பு கலந்த தண்ணீரில் அலச வேண்டும்.

2. ஒரு பீலரை வைத்து நன்றாக தோலை உறித்துக்கொள்ளவேண்டும்.

3. ஒரு கெட்டியான கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் உளுந்து, வர மிளகாய், புளி மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். உளுந்து பொன்னிறமானவுடன் ஆறவிட்டு, ஒரு மிக்ஸியில் அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

4. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் பீர்க்கங்காய் தோல் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். அது நல்ல மிருதுவானவுடன் ஆறவைத்துக்கொள்ளவேண்டும்.

5. இப்போது ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பொருட்களுடன் இதையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். தேங்காய்த் துருவலை நேரடியாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவேண்டும்.

6. துவையல் பதத்துக்கு கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவேண்டும் என்பதால், இதில் தண்ணீர் அளவாக சேர்த்து, பல்ஸ் மோடில் அரைத்து எடுக்கவேண்டும்.

7. பீர்க்கங்காய் துவையல் தயார். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும் அல்லது சாதத்துக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இட்லி, தோசை, பூரி, சப்பாத்தியுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.