குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : எப்போதெல்லாம் பெற்றோர் குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்ளவேண்டும்?
குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : உங்கள் குழந்தைகளை ஒரு நல்ல மனிதராக மாற்ற நீங்கள் எப்போதெல்லாம் அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளவேண்டும் என்று பாருங்கள்.

ஒழுக்கமே நல்ல நடத்தையை உருவாக்குகிறது
நீங்கள் கடுமையாக நடந்துகொள்ளும் பெற்றோர் என்றால், அது கடுமையாக விமர்சிக்கப்படும். ஆனால் சில எல்லைகள் உங்கள் குழந்தைகளை இரக்கமுள்ளவர்களாகவும், அன்பானவர்களாகவும், நல்லவர்களாகவும் நீங்கள் வளர்த்தெடுக்க உதவும். எனவே நீங்கள் எதில் எல்லாம் கடுமையாக நடந்துகொள்ளவேண்டும் என்ற அளவுகோல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
எல்லைகளை தெளிவாக வகுத்துக்கொள்ளுங்கள்
நீங்கள் தெளிவாகவும், தெரடர்ச்சியாகவும் ஒரு விதியை வகுக்கும்போது, அது குழந்தைகளுக்கும் பிடிக்கத்தான் செய்யும். என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வது பாதுகாப்பு உணர்வு, பொறுப்பு மற்றும் மரியாதையைக் கொடுக்கிறது. அவர்கள் வாழ்க்கை முழுவதற்கும் தேவையான மரியாதை மற்றும் பொறுப்பை அவர்கள் இதன் மூலம் வளர்த்துக்கொள்கிறார்கள்.
அன்றாட வேலைகள் பழகுவது
உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் வயதுக்கு ஏற்ப வீட்டில் வேலைகளை பிரித்து கொடுத்துவிடவேண்டும். இதனால் அவர்களுக்கு பொறுப்பு, ஒருங்கிணைந்து வேலை செய்வது மற்றும் கடின உழைப்புக்கான பலன் ஆகியவற்றைக் கொடுக்கிறது. அவர்கள் தனித்தன்மையை உருவாக்கிக்கொள்கிறார்கள். ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தில் அனைவரின் பங்களிப்பும் இருக்கவேண்டும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.
