குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : குழந்தைகளிடம் இந்த விஷயங்களை மட்டும் செய்துவிடாதீர்கள்; அவர்களுக்கு செய்யும் துரோமாகும்!
குழந்தைகளிடம் இந்த விஷயங்களை மட்டும் செய்துவிடாதீர்கள். அது அவர்களுக்கு செய்யும் துரோகத்தைப் போலாகும்.

எது குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் துரோகம் என்று பாருங்கள். குழந்தைகள் அவர்களின் உணர்வுகளையும், அவர்கள் பாதிக்கப்படுவதையும் பெரியவர்களைப் போல் வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால் அவர்கள் கடுமையாக அதற்காக வருத்தப்படுவார்கள். இந்த அன்றாட செயல்பாடுகள், உங்களுக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், குழந்தைகளுக்கு அது கடினமாக இருக்கும். அது உங்களுக்கு வழக்கமாகும். ஆனால் அவர்களுக்கு அது சிரமமாகும். அவர்கள் அமைதியாக அதை வெளிப்படுத்துவார்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களைச் செய்தால், அது அவர்களின் வாழ்க்கையில் நீண்ட கால பாதிப்புக்களை ஏற்படுத்தும். அவை என்னவென்று பாருங்கள்.
அவர்கள் பேசும்போது நீங்கள் ஃபோனை பார்த்துக்கொண்டிருப்பது
இதை நீங்கள் செய்யும்போது, அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தும். அவர்களின் வார்த்தைகளுக்கு முழு கவனம் கிடைக்கவில்லை என்பதை உணர்த்தும். நீங்கள் அவர்கள் மீது கவனம் செலுத்தவில்லையென்றால், அது அவர்களிடம், அவர்களை இரண்டாம்பட்சமாக கருதுவதைப்போலாகும். அது சில நொடிகள் என்றாலும், அது தவறுதான்.
அவர்களின் உணர்வுகளை டிராமா என்று கூறும்போது
குழந்தைகளின் உணர்வுகளை அது சுருக்கிவிடும். இது அவர்களின் உணர்வுகளை தவறு என்றும் அல்லது அதிகப்படியானது என்றும் கூறுவதைப்போலாகும். அவர்களின் உணர்வுகளை அடுத்த முறை வெளிப்படுத்தாமல் அவர்கள் பூட்டி வைத்துக்கொள்ளச் செய்துவிடும்.