Parenting Tips : குழந்தைகளின் மூளை ஷார்ப்பாக வேண்டுமா? அவர்களை அறிவாளிகளாக்கும் வழிகள் இதோ!
Parenting Tips : இந்த பரபரப்பான உலகில், குழந்தைகளின் மனஆரோக்கியத்தை வளர்த்தெடுப்பது என்பது அவர்களின் முழு வளர்ச்சிக்கும் மிகவும் அவசியம். எதிர்காலத்தில் அவர்கள் சாதனைபுரிவதற்கு அது காரணமாகிறது. இந்த திறன்களை வளர்த்தெடுப்பதில் பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

Parenting Tips : குழந்தைகளின் மூளை ஷார்ப்பாக வேண்டுமா? அவர்களை அறிவாளிகளாக்கும் வழிகள் இதோ!
வாழ்வில் சவால்களை அவர்கள் குழந்தைகள் எதிர்கொள்வதற்காக அவர்களை தயார்படுத்துவதில் பெற்றோரின் வழிகாட்டல் மிகவும் அவசியமாகிறது. அவர்கள் துணிச்சலாக எவ்வித சவாலையும் எதிர்க்க வேண்டும் மற்றும் நேர்மறையாற்றலை பெறுவதற்கும் இது அவசியமாகிறது.
உணர்வுகளை புரிந்துகொள்வது மற்றும் முறைப்படுத்துவது
திறந்த உரையாடலை ஊக்குவிக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு உதவுங்கள். அவர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையானவற்றை செய்யுங்கள். தடைகளை கடந்து அவர்கள் ஓட உதவுங்கள்.
ஆழ்ந்த மூச்சுப்பயிற்சிகள் மற்றும் யோகா போன்ற உடற்பயிற்சிகள், மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகள் ஆகியவற்றை செய்வதற்கு பழக்குங்கள். இது அவர்களுக்கு சரிவிகிதமான ஆரோக்கியத்தையும், உணர்வு ரீதியாக முன்னேறி வருவதற்கும் உதவுகிறது.