Parenting Tips : உங்கள் குழந்தைகள் 18 வயதைத் தொடுகிறார்களா? அவர்களிடம் என்ன மாற்றங்கள் நடக்கிறது பாருங்கள்!
Parenting Tips : உங்கள் குழந்தைகள் 18 வயதைத் தொடுகிறார்கள் என்றால், அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

உங்கள் குழந்தைகள் 18 வயதை அடைந்தவுடன் அவர்களிடம் என்ன மாற்றங்கள் நடக்கிறது என்று பாருங்கள். அது மிகவும் முக்கியமான மாற்றங்களாகவும் இருக்கிறது. 18 வயதில், பல முக்கிய மாற்றங்கள் நடப்பதாக ஆய்வுகளும், அறிஞர்களும் கூறுகிறார்கள். அதை நாமே கூட சில நேரங்களில் அனுபவித்து இருக்கலாம். அவர்களுக்கு 10 வயதில் சட்ட ரீதியான சுதந்திரம் கிடைக்கும். உணர்வு ரீதியாக அவர்கள் முதிர்ச்சியை அடைகிறார்கள் என்று அறிவியல் கூறுகிறது. வளர் இளம் பருவத்தில் ஏற்படும் இந்த மாற்றங்கள் அனைத்தும், அவர்களின் தேர்வுகள், பொறுப்புகள் மற்றும் பரிணாமம் என அனைத்தும் உங்களிடம் மாறும்.
உறவுகள்
நீங்கள் குழந்தைப்பருவத்தில் இருந்து வளரிளம் பருவத்திற்கு மாறும்போது, உங்கள் உறவுகளிலும் சில மாற்றங்கள் ஏற்படும். இதனால் உங்களிடம் பெற்றோர் – குழந்தை உறவில் கூட குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். இருவரும் சமம், ஒருவருக்கொருவர் மரியாதையை வளர்த்தெடுக்கவேண்டும். புரிதல், திறந்த உரையாடல் மற்றும் வளர்ந்தவர்களிடம் பேச வேண்டிய விஷயங்கள் என உங்களின் அனைத்தும் மாறுபடும்.
வேலை தேர்வுகள்
உங்களுக்கு 18 வயதாகும்போது, உங்களுக்கு உங்களின் வேலையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது. வேலை, எதிர்காலம், பயிற்சி அல்லது நீங்கள் தொழிலைக் கூடத் துவங்கலாம். இது அவர்களுக்கு அவர்களின் தொழில் மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்க சுதந்திரம் கொடுக்கும்.
சட்டம்
குழந்தைகள் இப்போது வளர்ந்துவிட்டார்கள் எனவே வளர்ந்தவர்களாக அவர்களுக்கு, அவர்களின் செயல்களுக்கு அவர்களுக்கு முழு பொறுப்பும் உள்ளது. அதில் கிரிமினல் குற்றங்கள், சட்டம் தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திடுவது மற்றும் பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமலும் நீங்கள் முடிவெடுக்க முடியும்.
ஆரோக்கியம் மற்றும் மருத்துவ முடிவுகள்
இந்த வயதில் அவர்களின் மருத்துவ முடிவுகளை அவர்களே சுதந்திரமாக எடுக்க முடியும். அவர்களின் சிகிச்சைகள், மருத்துவர்கள் தேர்வு மற்றும் மருத்துவ இன்சூரன்ஸ்களை கையாள்வது, அவர்களின் முழு உடல் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு குறித்து முழு கட்டுப்பாடு எடுத்துக்கொள்வது அவர்களின் வசம்தான் உள்ளது.
கல்வி தொடர்பான முடிவுகள்
உங்கள் குழந்தைகளுக்கு அதிகம் சுதந்திரம் வேண்டும். குறிப்பாக அவர்களின் படிப்பு பாதையை தேர்ந்தெடுப்பதில் அவர்கள் சுதந்திரமாக செயல்படவேண்டும். அது அவர்கள் உயர் கல்வி பெறுவதாகட்டும் அல்லது புதிய தொழிலை துவக்குவதாகட்டும் அல்லது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஓராண்டு இடைவெளி எடுத்துக்கொள்வதாகட்டும். என எதில் வேண்டுமானாலும், அவர்கள் பெற்றோரின் தலையீடு இன்றி எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம்.
வாழ்க்கை தேர்வுகள்
18 வயதில், பெரும்பாலான இளம் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே சென்று கல்லூரியில் பாடம் படிக்கிறார்கள். தனிப்பட்ட சுதந்திரத்துடன் வாழ்கிறார்கள். குடும்ப உறவுகளில் மாற்றங்கள் நிறைய ஏற்படும். அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி, பொறுப்பு மற்றும் சுதந்திரம் ஆகியவை அவர்களுக்கு கிடைக்கும்.
பொருளாதார பொறுப்புகள்
அவர்கள் தங்களின் பொருளாதாரத்தை தாங்களே மேலாண்மை செய்ய பழக்கிக்கொள்வார்கள். பட்ஜெட் போடுவது, பில்களை ஒப்படைப்பது மற்றும் வரிகள் என அவர்கள் பொருளாதார அடிப்படையில் அதிக சுதந்திரம் அடைந்துவிடுவார்கள். இது கிட்டத்தட்ட பெரியவர்களின் அளவுக்கு அவர்கள் பொருளாதாரத்தை கையாள பழகிக்கொள்வார்கள்.
சட்ட சுதந்திரம்
18 வயதில், உங்கள் குழந்தைகள் சட்ட ரீதியாக வளர்ந்தவர்கள் ஆகிவிடுவார்கள். அவர்கள் தனிப்பட்ட முடிவுகளை எடுத்த அத்தனை தகுதிகளும் பெற்றவர்களாகிவிடுகிறார்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்து இடவும், வாக்குரிமையும், தனிப்பட்ட சுதந்திரம் கொண்டவர்களாகவும் இவர்கள் மாறுகிறார்கள்.
உணர்வு ரீதியான முதிர்ச்சி
வயது அதிகரிக்க அதிகரிக்க, அவர்களுக்கு உணர்வு ரீதியான முதிர்ச்சி அதிகரிக்கிறது. அவர்களால் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். ஆழ்ந்த சுய விழிப்புணர்வு கொள்கிறார்கள். அவர்களால் சிக்கலான உறவுகளை சமாளிக்கவும் முடியும். அதிகம் சுதந்திரம் பெறப்பெற அவர்களுக்கு பல்வேறு திறன்களும் அதிகரிக்கின்றன. அவர்கள் உணர்வு ரீதியாகவும் சில விஷயங்களைக் கையாள்கிறார்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்