திருக்கார்த்திகை-மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 1 லட்சம் தீபங்கள் ஏற்றி வழிபாடு
உலகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலில் லட்சதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் அகல் விளக்குகளால் ஜொலித்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை உற்சவ விழா டிசம்பர் 1ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தினமும் காலை , மாலை வேளைகளில் பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்நிலையில் இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயில் பொற்றாமரை குளம் முழுவதும் 1 லட்சம் தீபங்கள் ஏற்றப்படும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கோயில் பணியாளர்கள் பக்த சபையினர் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்று பொற்றாமரைக்குளம், அம்மன் , சுவாமி சன்னதிகள் உள்ளிட்ட ஆலயம் முழுவதும் அகல்விளக்குகள் மூலம் 1 லட்சம் தீபங்களை ஏற்றினர்.
இதனால் கோயில் முழுக்க ஜெகஞ்ஜோதியாகக் காட்சியளித்தது. பக்தர்கள் பரவசத்துடன் சாமி கும்பிட்டனர்.