ஆம்லேட் குழம்பு : அள்ளி அள்ளி சாப்பிடத் தூண்டும் ஆம்லேட் குழம்பு; அடித்து நொறுக்கும் சுவையில் செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஆம்லேட் குழம்பு : அள்ளி அள்ளி சாப்பிடத் தூண்டும் ஆம்லேட் குழம்பு; அடித்து நொறுக்கும் சுவையில் செய்வது எப்படி?

ஆம்லேட் குழம்பு : அள்ளி அள்ளி சாப்பிடத் தூண்டும் ஆம்லேட் குழம்பு; அடித்து நொறுக்கும் சுவையில் செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Updated May 06, 2025 02:10 PM IST

ஆம்லேட் குழம்பு : இதுபோன்ற மசாலா அரைத்து, இதுபோன்ற செய்முறையில் நீங்கள் ஆம்லேட் குழம்பு வைத்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் அள்ளி அள்ளி சாப்பிடுவார்கள்.

ஆம்லேட் குழம்பு : அள்ளி அள்ளி சாப்பிடத் தூண்டும் ஆம்லேட் குழம்பு; அடித்து நொறுக்கும் சுவையில் செய்வது எப்படி?
ஆம்லேட் குழம்பு : அள்ளி அள்ளி சாப்பிடத் தூண்டும் ஆம்லேட் குழம்பு; அடித்து நொறுக்கும் சுவையில் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

ஆம்லேட் செய்ய

• முட்டை – 4

• உப்பு – தேவையான அளவு

• பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

• பச்சை மிளகாய் – 2

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• மல்லித்தழை – சிறிதளவு

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மல்லித்தழை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.

அதை சிறிய ஆம்லேட் கரண்டியில் ஊற்றி 4 ஆம்லேட்களை தயாரித்து வைத்துவிடவேண்டும்.

மசாலா அரைக்க

• வர மல்லி விதைகள் – 2 ஸ்பூன்

• சோம்பு – ஒரு ஸ்பூன்

• மிளகு – ஒரு ஸ்பூன்

• சீரகம் – அரை ஸ்பூன்

• முந்திரி – 4

• பட்டை – 1

• வர மிளகாய் – 1

• பச்சை மிளகாய் – 1

• பூண்டு – 5 பல்

• இஞ்சி – அரை இன்ச்

• பெரிய வெங்காயம் – 1

• தக்காளி – 1

• மல்லித்தழை – சிறிதளவு

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

ஒரு மிக்ஸி ஜாரில் வர மல்லி விதைகள், சோம்பு, மிளகு, சீரகம், முந்திரி, பட்டை, வர மிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, பெரிய வெங்காயம், தக்காளி, மல்லித்தழை, கறிவேப்பிலை என அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

தாளிக்க தேவையான பொருட்கள்

• எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி

• கடுகு – கால் ஸ்பூன்

• பிரியாணி இலை – 1

• சோம்பு – ஒரு ஸ்பூன்

• வர மிளகாய் – 4

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• சின்ன வெங்காயம் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

• கஷ்மீரி மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

• மல்லித் தூள் – 2 ஸ்பூன்

• கரம் மசாலாத் தூள் – அரை ஸ்பூன்

• சீரகத் தூள் – கால் ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• தேங்காய்ப் பால் – அரை கப்

செய்முறை

1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, அது சூடானவுடன் கடுகு, பிரியாணி இலை மற்றும் சீரகம் சேர்த்து பொரியவிடவேண்டும்.

2. வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.

3. அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கஷ்மீரி மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், சீரகத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

4. அனைத்தும் நன்றாக எண்ணெயில் வேகவேண்டும். அடுத்து அரைத்த பேஸ்ட் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும்போது தேங்காய்ப் பாலை சேர்த்து கொதிக்கவிடவேண்டும். நன்றாக கொதித்தவுடன், அதில் தயாரித்து வைத்து ஆம்லேட்களை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

5. அதை 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொதிக்கவிட்டு, மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பர் சுவையான ஆம்லேட் குழம்பு தயார்.

இதை ஆறிய சாதத்தில் சூடாக சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.