தினம் தினம் இனி திண்டுக்கல் பிரியாணி வீட்டிலே சாப்பிடலாம்; இதோ இந்த மசாலாப் பொடி போதும்!
திண்டுக்கல் பிரியாணியை இனி வீட்டிலே ருசிக்கலாம். இதோ ரகசியம்.
பிரியாணி, இது தெற்காசியாவின் புகழ்பெற்ற உணவாகும். தற்போது கணக்கெடுப்பு நடத்தினாலும் பிரியாணி பிடிக்காதவர்களே நாட்டில் இல்லை எனும் அளவுக்கு பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை இருக்கும். அந்தளவுக்கு பிரபலமான உணவு. பிரியாணியை கறி, மீன், சிக்கன், பன்றிக்கறி, இறால் என அனைத்து வகைகளிலும் செய்யலாம். அதுவே சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு பன்னீர், காய்கறிகள், காளான், முட்டை என வகைகள் உள்ளது. இது மட்டுமின்றி பச்சை பட்டாணி, டபுள் பீன்ஸ், பட்டர் பீன்ஸ், சோயாவைப் பயன்படுத்தியும் பிரியாணி தயாரிக்க முடியும். பீட்ரூட் பிரியாணி, உருளைக்கிழங்கு பிரியாணியுடம் செய்யலாம். எனவே பிரியாணி சாப்பிடவேண்டும் என்று ஆசைப்பட்டால் அசைவம் அல்லது சைவம் என இரண்டு வகைகளிலும் செய்து சாப்பிடலாம். தெற்காசியாவின் மிக பிரபலமான உணவான பிரியாணி உள்ளது. இது முஸ்லிம்களுடன் தொடர்புடைய உணவாக இருப்பதால், பாய் வீட்டு பிரியாணிக்கு மவுசு அதிகம். இந்தியாவில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளில் பிரியாணி அதிகம் இடம்பெறுகிறது. பிரியாணிக்கு என்றே குறிப்பிட்ட சில கடைகளும் உள்ளன. அதில் பிரியாணி சாப்பிட மக்கள் கூட்டமும் அலைமோதும். இவைகளால் இந்தியாவின் பிரபல உணவாக பிரியாணி உள்ளது. இந்த பிரியாணியின் சுவையை அதிகரிப்பதே அதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் தான்.
திண்டுக்கல் பிரியாணி மசாலாப்பொடி செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
பட்டை – 10 கிராம்
கிராம்பு – 2 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
செய்முறை
முதலில் இதை எடுத்து தனியாகப் பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும். இந்தப்பொடியை வைத்து ஒரு கிலோ பிரயாணி தயாரிக்க முடியும்.
திண்டுக்கல் பிரியாணிக்கு தேவையான நிறம், மணம் மற்றும் சுவை மூன்றையும் கொடுப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.
மராத்தி மொக்கு – 5 கிராம்
கல்பாசி – 2 கிராம்
இவையிரண்டையும் தனியாகப் பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
செய்முறை
வழக்கம்போல் பிரியாணி செய்ய தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு பிரயாணி பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து முழு கரம் மசாலாக்கள் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஸ்டார் சோம்பு, ஏலக்காய் என அனைத்தும் சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும். அடுத்து வெங்காயம், தக்காளி சேர்த்து நல்ல பொன்னிறமாக குலைந்து வரும் வரை வதக்கவேண்டும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும். அடுத்து மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அடுத்து கொஞ்சமாக கரம் மசாலா சேர்த்து வதக்கவேண்டும். மல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவேண்டும். தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து மட்டன் அல்லது சிக்கன் சேர்த்து கொதிக்கவிட்டு, அரிசி சேர்த்து, பொடித்து வைத்துள்ள இரண்டு ஸ்பெஷல் திண்டுக்கல் மசாலாவை சேர்த்து பிரியாணியை செய்து இறக்கினால். சூப்பர் சுவையான திண்டுக்கல் பிரியாணி தயார். இதுதான் திண்டுக்கல் பிரியாணிக்கு தனி மணம் கிடைக்க காரணம்.
குறிப்புகள்
பிரியாணி நன்றாக கொதி வந்த பின்னர்தான் மல்லிப்பொடி தூவவேண்டும். இந்த ஒரு மசாலாப்பொடி போதும் தினம், தினம் இனி திண்டுக்கல் பிரியாணிதான். வீட்டிலே செய்யலாம் ஈசியா. அனைவரும் விரும்பும் சுவையில் இருக்கும். குழந்தைகளும், பெரியவர்களும் போட்டிபோட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள் ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்