ஆப்ரேஷன் வேண்டாம்; சிறுநீரகத்தில் 2 எம்எம் முதல் 15 எம்எம் வரை உள்ள கல்லைக்கூட நீக்கலாம் – மருத்துவர் அறிவுரை!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஆப்ரேஷன் வேண்டாம்; சிறுநீரகத்தில் 2 எம்எம் முதல் 15 எம்எம் வரை உள்ள கல்லைக்கூட நீக்கலாம் – மருத்துவர் அறிவுரை!

ஆப்ரேஷன் வேண்டாம்; சிறுநீரகத்தில் 2 எம்எம் முதல் 15 எம்எம் வரை உள்ள கல்லைக்கூட நீக்கலாம் – மருத்துவர் அறிவுரை!

Priyadarshini R HT Tamil
Dec 29, 2024 03:27 PM IST

அறுவைசிகிச்சையில்லாமல் சிறுநீரகத்தில் உள்ள கற்களை அடித்து வெளியேற்றும் வழிகளாக சித்த மருத்துவர் கூறுவது என்ன?

ஆப்ரேஷன் வேண்டாம்; சிறுநீரகத்தில் 2 எம்எம் முதல் 15 எம்எம் வரை உள்ள கல்லைக்கூட நீக்கலாம் – மருத்துவர் அறிவுரை!
ஆப்ரேஷன் வேண்டாம்; சிறுநீரகத்தில் 2 எம்எம் முதல் 15 எம்எம் வரை உள்ள கல்லைக்கூட நீக்கலாம் – மருத்துவர் அறிவுரை!

அறுவைசிகிச்சை செய்யும்போது, அது மீண்டும், மீண்டும் உருவாகத் துவங்கும். சிறுநீரகத்தில் கற்கள் வந்துவிட்டாலே நாம் அதிக தண்ணீர் பருகவேண்டும். அதிகளவு தண்ணீர் பருகிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் அதிக முறை சிறுநீர் கழிப்போம். அதன் வழியாக கல்லும் வெளியேறிவிடும். வலியை குறைக்க வலி நிவாரணி எடுத்துக்கொள்ளப்படும். சிறுநீர் பாதையில் கற்கள் தேங்கிவிட்டால், சிறுநீரக தொற்று ஏற்பட்டு, அறுவைசிகிச்சை வரை கொண்டு செல்லும் வாய்ப்புள்ளது. எனவே சிறிய அளவில் இருக்கும்போதே கவனம் தேவை.

அறிகுறிகள்

சிறுநீரகத்தில் கற்கள் தோன்றினால் அவற்றை போக்கும் இயற்கை வழிகள்

வயிறு முதல் சிறுநீர் பாதையில் கடும் வலி

விட்டுவிட்டு வலி ஏற்படும்.

சிறுநீர் கழிக்கும்போது வலி மற்றும் எரிச்சல் ஏற்படும்.

சிறுநீர் சிவப்பு அல்லது பிரவுன் நிறத்தில் கழித்தல்

கடும் துர்நாற்றத்துடன் சிறுநீர் கழித்தல்

வழக்கத்தை விட அதிகம் சிறுநீர் கழிப்பது அல்லது குறைவாக கழிப்பது

வாந்தி மற்றும் மயக்கம்

காய்ச்சல் மற்றும் தொற்று ஏற்படும்போது உடலில் அதிக குளிர் மற்றும் நடுக்கம் ஏற்படுவது,

இந்த அறிகுறிகள் அதிகம் ஏற்படும்போதும் அல்லது சிறுநீரில் ரத்தம் வெளியேறும்போதும் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

ஆப்ரேஷன் செய்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. சிறுநீரகத்தில் கற்கள் இருக்கும்போது பயப்பட தேவையில்லை. 2 எம்எம் முதல் 15 எம்எம் வரை உள்ள கற்களைக் கூட கரையவைக்க முடியும். அதற்கு மூன்று எளிய வழிமுறைகள் உள்ளது. திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதற்கான தீர்வை பகிர்ந்துள்ளார். அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

முதல் முறை

சிறுபீழை என அழைக்கப்படும் பூளைப்பூ என்ற பூவை சேகரித்துக்கொள்ளவேண்டும். அதை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அதை அரை லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சேர்த்து ஊறவைத்து, காலையில் அதை 100 மில்லி லிட்டராக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். அதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும்.

இரண்டாவது முறை

நெருஞ்சி முள் சம்மூலம்

நெருஞ்சி முள், வேர், தண்டு, பூ என அனைத்தையும் சேகரித்து, நிழலில் காயவைத்து பொடித்துவைத்துக்கொள்ளவேண்டும். இதில் 30 கிராம் பொடி எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் இரவு ஊறவிட்டு, காலையில் 100 மில்லி லிட்டராக சுண்டும் வரை காய்ச்சி வடிகட்டி பருகவேண்டும்.

மூன்றாவது முறை

ரணகள்ளி இலையை 2 எடுத்து, அதை கால் ஸ்பூன் மிளகு சேர்த்து அரைத்து அப்படியே சாப்பிடலாம். இந்த மூன்றில் எதாவது ஒரு வழிமுறையை 48 நாட்கள் பின்பற்றும்போது, அது உங்களுக்கு இரண்டு கிட்னியில் உள்ள கற்களையும் கரைந்து ஓடச்செய்யும். அந்த கற்கள் சிறுநீர் பாதை வழியாக வெளியே வந்துவிடும். இவ்வாறு மருத்துவர் காமராஜ் கூறுகிறார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.